இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
65
இந்த ஓர் இடம் மட்டும் வேகவில்லையாம். அந்த இடத்து மண் வெண்மையாகவே இருக்கிறது. ஆம், திரிபுராந்தகராம் செம்மேனி எம்மான் சுட்ட மண் செம்மண். அவரால் சுடப்படாத மண் வெள்ளை மண். இப்படி வேகாக் கொல்லையின் வெண் மண்ணும், திருஅதிகையின் செம் மண்ணும் திரிபுர தகனத்துக்குச் சான்று பகர்ந்து கொண்டு இன்னும் இருக்கின்றன. இதையெல்லாம் நம்ப மறுக்கிற நம் மனமுமே செம்மைப்பட வேண்டுமே.
வே.மு.கு.வ-5