பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

வேங்கடம் முதல் குமரி வரை

அப்பருடன் சேர்ந்து இந்தத் துறைகளிலே நீராடி இறைவனை வணங்கிய பேற்றை நாமும் பெறலாம்தானே. இங்குள்ள கோயில் பெரிய கோயிலுமல்ல, சிறிய கோயிலும் அல்ல. கருவறையைச் சுற்றிய கோஷ்டத்தில், ஆனந்தத் தாண்டவர், கங்காதரர் எல்லாம் கற்சிலைகளாக உருவாகியிருக்கிறார்கள். திருத்தொண்டர் அறுபத்து மூவரும், கல்லிலும் செம்பிலும் கவினூற அமைந்திருக்கிறார்கள், செப்பு வடிவத்தில் இருப்பவை நல்ல அழகான படிமங்கள். இந்தக் கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தார் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இந்தக் கோயிலுக்குள் ஒரு சிறு கோயில் குமரனுக்கு. அதற்குக் குமரக் கட்டளை என்று பெயர். இந்தத் தேவஸ்தானம் தருமபுரம் ஆதீனத்தார் நிர்வாகத்தில் இருக்கிறது. அருணகிரியார் இத்தலத்தை ரத்தினச் சிகண்டியூர் என்று குறிப்பிடுகிறார்.

எழில் வளமிக்குத் தவழ்ந்து உலாவிய
பொனிநதி தெற்கில் திகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டியூர் உறை பெருமாளே!

என்பது அருணகிரியார் திருப்புகழ்.

இக்கோயிலில் பதினாறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. முதற் குலோத்துங்கன், இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன் முதலிய சோழ மன்னரும், சடையவர்மன் சுந்தர பாண்டிய மன்னனும் ஏற்படுத்திய நிபந்தங்கள் குறிக்கப் பட்டிருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன், தன்னைக் 'கோனேரின்மை கொண்டான் வீர ராஜேந்திரன் திரிபுவன வீரதேவன்' என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். குமர கோயிலைப் பற்றிய கல்வெட்டுக்கள் இல்லை.

மாயூரத்திலே பார்க்கவேண்டிய கோயில் இன்னொன்றும் உண்டு. அதுதான் துலாக் கட்ட