பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9
நலங்கிள்ளி

காடழித்து நாடு கண்டவன் கரிகாலன். வாணிகம் வளர்த்து வளங்கொழித்தவனும் அவனே. வாணிகத்தால் வளம் பெற வேண்டுமாயின், கடல் வாணிகத்தில் கருத்துன்ற வேண்டும் எனக் கருதிய கரிகாலன், அது வளர்வதற்கு வழி செய்வான் வேண்டிக், கடற்கரைக்கண் அமைத்த பெருநகரே புகார். கடல் வாணிகத்தால் வளம் பல பெற்ற புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியைக் காத்து இருந்தவன் நலங்கிள்ளி.

நலங்கிள்ளி நாட்டாசை கொண்டவன்; தன் போலும் வேந்தர்கள் தனியரசு செலுத்துவதை அவன் உள்ளம் பொறாது. அவ்வேந்தர்களின் வெண் கொற்றக் குடைகளெல்லாம் தாழ்ந்து பின்னே நிற்கத் தன் குடை ஒன்றே உயர்ந்து முன்னிற்றலை விரும்புபவன். வேந்தர்களின் வெற்றிப் புகழ் விளங்க விடியற்காலையில் முழங்கும் வெண்சங்கு, தன் அரண்மனை ஒன்றில் மட்டுமே முழங்குதல் வேண்டும்; பிற வேந்தர்கள்பால் உள்ள வெண் சங்குகளெல்லாம்