பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 7



தோன்றிய இலக்கியமும் சிறந்தனவாயின், அம்மொழி வழங்கும் மக்கள். அதாவது, அவ்விலக்கியத்தால் உணரப்படும் மக்கள், சிறந்த செயலும், சீரிய பண்பும் வாய்ந்தவராவர் என்பது உறுதி.


      “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்,
       வாக்கினிலே ஒளி உண்டாகும்”

என்றார் பாரதியார்.

உள்ளம் தூயதாயின், சொல்லும் தூயதாம், செயலும் துயதாம். உள்ளம் தூயர், துய்மையின் நீங்கிய சொல் வழங்கலும், தூய்மையின் நீங்கிய செயல் புரிதலும் செய்யார். தீய சொல்லும், தீய செயலும் உடையாரின் உள்ளம் மட்டும் தூயதாதல் இயல்பன்று. சொல்லும் செயலும் உள்ளத்தை உணர்த்தும் உயர்ந்த கருவிகளாம். ஆகவே, உள்ளமும், உரையும், உற்ற தொழிலும் ஒன்றோடொன்று உறவுடையன. ஒன்று நன்றாயின், ஏனைய இரண்டும் நன்றாம்! ஒன்று தீதாயின், ஏனைய இரண்டும் தீதாம். ஆகவே, உயர்ந்த மொழியும், சிறந்த இலக்கியங்களும், உயர்வும் சிறப்பும் ஒருங்குடையாரிடத்து மட்டுமே உளவாம் என்ற உண்மைகளை உறுதி செய்கின்றன. கரும்பு தோன்றுவது கழனியில், களர் நிலத்தில் அன்று.

செந்தமிழ் மொழி சிறந்த இலக்கியங்களையும், அவ்விலக்கியங்களின் பண்பினை இனிதெடுத் துரைக்கும் இலக்கணங்களையும் பெற்றுளது. ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்பது விதி.