பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 புலவர் கா. கோவிந்தன்



தன்னை வருத்தும் பெரும் பசியைப் போக்கிக் கொள்வான் வேண்டிக் கொழுத்த காட்டுப் பன்றி யொன்றை எதிர்த்துத் தாக்க, அது தன் இடப் பக்கத்தே வீழ்ந்து, இறந்தது கண்டு, இடப்பக்கம் வீழ்ந்ததனை உண்ணாத உறுதி, உள்ளத்தை உரன் செய்யப் பசி தன் வயிற்றைக் கொடுமை செய்யவும், அதைப் பொருட்படுத்தாது, வீழ்ந்த பன்றியை உண்ணாதே விட்டுச் சென்று, மறுநாள் தன்முழையினின்றும் வெளிப்பட்டுப் பெரிய ஆண் யானை ஒன்றை எதிர்த்துத் தாக்கி, அதை வலப்பக்கத்தே வீழுமாறு வீழ்த்தி உண்டு, தன் பசி போக்கும் பேராண்மை யுடையது புலி.

“உலகில் வாழும் மக்களிலும் எலிபோல இழிவுள்ளம் உற்றாரும், புலிபோலப் பேருள்ளம் பெற்றாரும், ஆகிய இருவகையினர் உளர். எலி யொத்த இயல்புடையார், தம் தோள்வலியால் வாழ எண்ணாது, அதன் வண்மையில் நம்பிக்கையற்றுப் பிறர் பெரும் பாடுபட்டுச் சேர்த்து வைக்கும் பொருளை அவர் அறியாவாறு சிறிது சிறிதாகக் களவாடிக் கொண்டுபோய், அதையும் தம் வயிறார உண்டு வாழ எண்ணாது, உண்ணாதே சேர்த்து வைப்பர். புலிநிகர் மாந்தரோ என்றால், தாம் அரிதின் முயன்று ஈட்டிய பொருளையன்றிப் பிறர் தேடி வைத்த பொருளை மனத்தாலும் தீண்டா மாண்புடையராவர். பொருள் தேடும்பொழுதும், தம் புகழ் கெட வரும் செல்வம், அளவிடற்கரியதாம் பெருஞ்செல்வமே யாயினும்,