பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்
180டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட முன்றுபுரி நுண்ஞ்
புலராக் காழகம் புலர வுடீஇ
185உச்சிக் கூப்பிய தற்புகழ்ந்
தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி
நாவியன் மருங்கி னவிலப் பாடி
விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலு முரிய னதாஅன்று.

5. குன்றுதோறாடல்


190பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல
னம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணிய
னறுஞ்சாந் தணிந்த கேழ்கினர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
195நீடமை விளைந்த தேக்கட் டேறற்