பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

49

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றி மூத்தகுடி"

என்று சொன்னால், அந்த மூத்தகுடி ஒரு படிநிலை வளர்ச்சி பெற்றுக் கலையியல் - பண்பாட்டியலில் வளர்ந்து, நாகரிகமுற்று, மொழியியலிலே, இலக்கியத் தன்மையிலே, அரசியல் தன்மையிலே, பொருளியல் தன்மையிலே வளர்ச்சி பெற்று, ஒரு பெரிய சிறந்த வாழ்வினமாக இருந்தது. அந்த இனத்தைப் படிப்படியாக வீழ்த்துகின்ற நிலையிலே, அந்த இனத்தின் நல்லியல்புகளை, நல்லியல் கூறுகளை, அரசியல் கூறுகளை, வாழ்வியல் கூறுகளை, உண்மையியல் கூறுகளை மெய்யியல் கூறுகளை, ஒன்றாக ஓரிடத்திலே குவித்துக் காட்டி, வருங்காலத் தமிழினத்திற்கு அவற்றை வழிகாட்டியாக ஆக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு திருவள்ளுவர் எழுதிய நூல்தான் திருக்குறள்

அது ஏதோ தர்மத்தைப் படைப்பதற்காக - மக்களுக்கான நல்வியல்புகளைக் குறிப்பதற்காக - மட்டும் தோற்றுவிக்கப்பட்ட நூல் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நல்லியல்புகள் அனைத்தும் அதிலே இருக்கின்றன. இந்த இனத்தின் மீட்சி அதிலே சொல்லப் பட்டிருக்கின்றன. இந்த இனத்தின் பண்பாடுகள். சொல்லப்பட்டிருக்கின்றன: நீண்ட நெடிய வரலாற்று. நாகரிகக் கூறுகள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இனத்தின் மெய்யறிவியல் அங்கே சொல்லப்பட்டிருக்கிறது

இருப்பினும் திருக்குறளை மட்டுமே வைத்துக் கொண்டு இனத்தை மீட்டுவிட முடியாது

அதிலே அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது. பொருளியல் அங்கே உணர்த்தப்பட்டிருக்கிறது. இன்ப இயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/59&oldid=1163402" இலிருந்து மீள்விக்கப்பட்டது