பக்கம்:கல்வி எனும் கண்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேநிலை வகுப்பு (+2)

61



வகுப்பு வரையில் ஆங்கிலமே பயிற்றுமொழியாகக் கொள்வதால் அவர் மேல் வகுப்பில் சேர்ந்து படிப்பதில் அதிகத்தொல்லை இல்லை. ஆனால் பத்தாம் வகுப்பு வரை தமிழில் பயின்றவர்கள் படிக்க இடர்ப்படுகின்றனர். மேலும் மத்திய கல்விக்கூடங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள பிற எல்லாவகைக் கல்விமுறைகளும் - பத்தாம் வகுப்பு வரையில் வேறாக இருப்பினும்-பதினோராம் வகுப்பில் ஒரேவகையான பாடம்-தேர்வு. பிறமுறைகள் ஒன்றி அமைகின்றன. பயிற்றுமொழி எதுவாயினும் பாடச்சுமையும், ஆய்வுக் களநிலைகளும் இந்த இருமேல் வகுப்புகளிலும் முற்றிலும் மாறுபட்டுள்ளமையின் பெரும்பாலான மாணவர் அல்லல் உறுவர். எனவேதான் இந்தத் தேர்விலும் பெரும்பாலோர் தோல்வியுற நேர்கிறது.

தமிழ்நாட்டுப் பாடமுறை இந்த இருவகுப்புகளிலும் சற்றே குறைவாகவே தொடக்கநாளில் இருந்தது. எனினும் 1986-87 முதல் தரம் உயர்த்தப்பெற்றது. மத்திய பள்ளிகளில் தரம் உயர்ந்திருந்ததோடு, திருத்தும்முறை, நாடுதழுவிய நிலையில் அன்று இருந்ததால் மாணவர்கள் அதிக எண் பெறஇயலவில்லை என்றும் அதனால் பொறியியல், மருத்துவம் முதலிய கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினை இழக்கிறார்கள் என்றும் கருதிய காரணத்தால் அந்தப் பாடத்திட்டம் எளிமையாக்கப் பெற்றதோடு, திருத்தங்களும் சென்னையிலேயே நடைபெற ஏற்பாடாயிற்று. ஆயினும் அதே வேளையில் எம்.ஜி.ஆர். காலத்திய தமிழக அரசு, நன்கு ஆய்ந்து மாணவர் தரம் உயரவேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றமும் ஏற்றமும் கண்டது ஆசிரியர்தம் முயற்சியினாலும் மாணவர் ஆர்வத்தாலும் அவர்கள் அதிக எண் பெற்றுப் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில் உரிய இடங்களைப் பெறுகின்றனர்.

இத்தகைய இரு ஆண்டுக் கல்வியினைப் பற்றிச் சற்றே ஆழ்ந்து காணல் நலமாகும். இது ஒரு பேரேரியாக இயங்குவது,