பக்கம்:கல்வி எனும் கண்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கல்வி எனும் கண்


.

வகுப்பு முடிய முறையான பாடத்திட்டங்கள் அமையலாம். வரலாறு, நிலநூல், கணக்கு, அறிவியல் துளிகள், நல்வாழ்வு, மொழிகள் இரண்டு (தாய்மொழியும் மற்றொன்றும்) எனப் பகுத்து அவற்றிற்கெனப் பாடநூல்கள் அமைக்கலாம். முதல் இரண்டு வகுப்புகளுக்கும் நான் மேலே காட்டியபடி பாடல்நூல்கள் ஆரம்பத்தில் தடையில்லை. ஆயினும் கணிதம். மொழி இரண்டினைத் தவிர, மற்றவற்றிற்குப் பாடநூல்கள் அமையவழியில்லை; அவை பெரும்பாலும் அந்தந்தச் சூழலை ஒட்டி அமைவதால் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு ஏற்றவகையில் பாடங்களை உருவாக்க, தக்கவர் அமைந்த குழு அமைத்து, குழந்தைகள் உளங்கொளும் வகையில் மொழிப்பாடங்களும் பிறவும் எழுதச் சொல்லவேண்டும் பழங் காலத்தில் இரண்டாம் வகுப்புவரை ஊர், அதன் பக்கச் சூழலை அறிந்த குழந்தை, மூன்றாம் வகுப்பில் அந்த வட்டத்தைச் சேர்ந்த நிலநூல் பயிற்சி பெறும். அப்படியே வரலாற்றில் சிலவற்றை-இராசராசன், சிவாஜி, காந்திஅடிக்ள் போன்றவர் வரலாறு முதலியன, சிறுசிறு கதைகளாக. பிள்ளைகள் விரும்பும் வகையில் இடம்பெறச் செய்யலாம். மற்றைய கணக்கு இரு மொழிகள் ஆகியவற்றிற்கு வகுப்புக்கு ஏற்ற பாடங்கள் அமைந்த நூல்கள் அச்சிடலாம். நான்காம் வகுப்பில் மாவட்டம், ஐந்தாம் வகுப்பில் மாநிலம் என்ற அளவில் பாடங்களும் மொழிகளில், வகுப்பின் வளர்ச்சிக்கு ஏற்ற சில சிறு இலக்கியங்களும் இடம் பெறலாம். கணக்கு முறை படிப்படியாக வகுப்புக்கு ஏற்ப வளர்ச்சி பெறும்வகையில் பாடத்திட்டம் அமையலாம். இவ்வாறு எல்லாப் பாடங்களும் முறையாக அமைய, நல்லாசிரியர்கள் முறைப்படி நடத்தினால் ஐந்தாம் வகுப்புவரையில் பயிலும் ஒரு மாணவன் கல்வியின் தெளிந்த அறிவு பெறுவான் என்பது உறுதி.

நான் முன்னமே குறித்தபடி பள்ளிக்கூடத் திட்டங்களைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். திண்ணைப் பள்ளிக்