பக்கம்:கல்வி எனும் கண்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்கலைக் கழகங்கள்

53



தான் நட்புக்கு அடையாளம். உங்களுக்கு நன்றி என்று கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தார். எனக்கு ‘நகுதற் பொருட் டன்று நட்டல்' என்ற குறள் நினைவுக்கு வந்தது. அவரை வாழ்த்தினேன்.

ஆனால் இன்று நான் எழுதியுள்ளதை பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் எப்படிக் கொள்வார்களோ! நல்ல உள்ளங்கள் நகுதற்பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு என்ற குறள் வழி இவற்றை ஏற்றுக் கொள்வர் என நம்புகிறேன். எப்படியாவது என்னை ஆளாக்கிய பல்கலைக்கழகம் பழைய நிலையை அடைய வேண்டும் என்பதே என் ஆசை. அதை இன்றுள்ளவர்கள் நிறைவேற்றுவார்கள் எனவும் நம்புகிறேன்.

பல்கலைக் கழகங்களிலோ கல்லூரிகளிலோ மாணவர்களைச் சேர்க்கும்போது, தரம் எண்ணப் பெற வேண்டும். பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி முதலியவற்றிற்கு 90, 95 எனக் காணும் நிலையில் பிற கல்லூரிகளுக்குக் குறைந்தது அறுபதாவது 60 இருக்க வேண்டாமா? ‘பி. பி. ஏ.’ வகுப்பில் சேர்வதற்கு மட்டும் சென்னைப் பல்கலைக் கழகம் அத்தகைய விதியினை அமைத்துள்ளது. அதேபோன்று பிற பாடங்களுக்கும் அமைத்தால் எவ்வளவு ஏற்றம் பெறும்.‘ Eligible for College Course’ என்று முற்காலத்திய பள்ளி இறுதி வகுப்பின் சான்றிதழ்களில் அச்சிடப் பெற்றிருக்கும் நல்லவேளை தற்போதைய சான்றிதழ்களில் அத்தகைய தொடர் இல்லாதது மகிழ்ச்சிக்குரியதே. எனினும் முப்பத்தைந்து வாங்கித் தேறினான் என்றால் அம்மாணவன் கல்லூரியில் சேரத் தகுதி பெற்றவனாகின்றான். பெரிய இடத்து சிபாரிசு இருந்தாலோ அல்லது பெரும் பணம் கொடுத்தாலோ அவனுக்கும் கல்லூரியில் இடம் கிடைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பெற்றோருக்கும் பிற தொழிற் கல்லூரிகளுக்கு இருப்பது போன்று ஓரளவு சலுகை தருவதில் தவறில்லை. மேலும் எத்தனை முறை படையெடுத்து, ஒவ்வொரு பாடமாகத் தேறினாலும்