பக்கம்:கல்வி எனும் கண்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


4. இடைநிலை-உயர்நிலைப் பள்ளிகள்



இந்தப் பள்ளிகளைப் பற்றி எழுதத் தொடங்க நினைக்கையில் என் நினைவு அறுபது ஆண்டுகளைத் தாண்டிப் பின் செல்கிறது. 1926இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து பெரியார் பிரிந்தார்-வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம்-பள்ளி, கல்லூரி-உத்தியோகம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இடம் தருதல் என்ற கொள்கை உருவாகிய காலம் அது. பிராமணர் அல்லாதார் இயக்கம் செயல்படத் தொடங்கி, நீதிக்கட்சி (Justice Party) எனப் பெயர் பெற்று நாட்டில் வளரத் தொடங்கிய காலமது. அதே வேளையில் அன்றைய ஆங்கில அரசும் இந்தியருக்குச் சில வகையில் ஆளும் உரிமைகளை விட்டுக் கொடுக்கத் திட்டமிட்டது. 1927-28இல் தில்லி, சென்னை சட்டசபைகளுக்குத் தேர்தல் என அமைக்க நினைத்த காலமும் அது. அன்றைய சென்னை மாகாணத்தில் (ஒரியா பேசும் கஞ்சம் முதல்-வட கன்னடம் வரையில்-ஒரியா, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகள் பயிலும் மாகாணம்) சர்.பி.தியாகராயர், பனகல் அரசர் தமிழகத்தைச் சேர்ந்த P.T. இராசன், முத்தையா முதலியார் ஆகியோர் முக்கிய இடம் பெற்ற நீதிக் கட்சி ஆட்சி அமைத்த காலமும் அது. அந்தக் காலத்தில் இருந்த கல்வி முறைதான்-ஆண்டுகள் பெரும் அளவில் மாற்றம் பெற்ற போதிலும்-அடுக்கடுக்காக குறிப்பேடுகளும் நூல்களும் தூக்க முடியாத அளவில் பிள்ளைகள் தூக்கிச் சென்ற போதிலும்-நல்ல நெறிக்கு மாறாமல், எங்கோ வேறு திசையில் சென்று கொண்டு இருக்கிறது.

1930க்குப்பின் காந்தி அடிகள் உப்புச்சத்தியாக்கிரகம், போன்ற பெரும் கிளர்ச்சியினால் காங்கிரஸ் செல்வாக்குப்