பக்கம்:கல்வி எனும் கண்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரம்பக் கல்வி

93



யிலிருந்து மதுரைக்கு (தன் தாய் வீட்டிற்கு) வந்து கொண்டிருந்த ஒரு தாயும் 7.8 வயது மதிக்கத்தக்க பெண்ணும் உடன் பயணம் செய்தனர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது நான் அங்குள்ள கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுவதைச் சொன்னேன். அக் குழந்தையுடனும் சிரித்துப் பேசினேன். ஆயினும் அன்னையார் என்னை தன் மகளுக்கு 'இவர் ஒரு வாத்தியார்' என அறிமுகப்படுத்திய உடன் அக் குழந்தையின் முகம் மாறுபட்டது. எனக்குப் புரியவில்லை. அன்னையார் என்னவென்று கேட்டார்கள். அந்தக் குழந்தை 'வாத்தியார் சிரிப்பாரோ, நீ பொய் சொல்லுகிறாய்” என்று பதில் சொல்லிற்று. பிறகு அவர்கள் பம்பாய் மாதுங்காவில் அந்தக் குழந்தை படிக்கும் பள்ளியில் அதன் வகுப்பில் உள்ள ஆசிரியர் சிடு சிடுப்பாக இருந்து குழந்தைகளை எப்போதும் அடித்தும் வைதும் பாடம் சொல்லிக் கொடுப்பார் என்றார்கள். நான் உண்மையில் வருந்தினேன். இது பற்றி என் 'வையைத் தமிழ்' என்ற முதல் நூலில் ஒரு கட்டுரையே எழுதியுள்ளேன், இளம் பிஞ்சு உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றி அத்தகைய எண்ணம் உண்டானால்-பயம் ஏற்பட்டால்-அது எப்படிப் படிக்க முடியும்? எனவே ஆசிரியர்கள் -சிறப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் அன்பு கலந்த தயுளத்தோடு இன்முகத்தோடு குழந்தைகளுக்குப் பாடம் கற்பி கவேண்டும். இன்று சென்னையில் பல தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வகையில் பெண்களே ஆசிரியராக உள்ளனர். தமிழக அரசும் இனி ஆரம்பப்பள்ளிகளில் பெண்களையே ஆசிரியர்களாக நியமிக்கப் போவதாகக் கூறியது ஆறுதல் அளிக்கின்றது. பெண்கள் தாயுள்ளம் கொண்டவர்களாதலின் அவர்தம் பண்பும் பழக்கமும் குழந்தைகளுக்கு ஆதரவாக அமையும் என்ற அடிப்படையிலே இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பெறுகின்றன.

முதல் இரண்டாம் வகுப்புகளில் இந்த வகையில் ஆரம்பக் கல்வி அவரவர் வாழும் ஊர், சுற்றுச் சூழல், தொடக்கப்பாடம், பாட்டு, கணக்கு என அமைய, மூன்றாம்