106
கபாடபுரம்
"தன்மைகளை உணர முயலவேண்டும். ஆராய்வதற்கு ஆசைப்படக் கூடாது..."
"உணர்வது வேறு; ஆராய்வது வேறு என்றா நினைக்கிறீர்கள்?"
"சந்தேகமென்ன? உணர்ச்சிக்கு முடிவில்லை. ஆராய்ச்சிக்கு முடிவுண்டு! 虏 என்னை உணர வேண்டுமென்றுதான் நான் ஆசைப்படுவேனே ஒழிய ஆராய வேண்டுமென்று நான் ஒருபோதும் ஆசைப்படமாட்டேன்."
"அப்படியல்ல மனிதர்களை ஆராய்ந்து உணரவேண்டு மென்பார் என் தந்தை..."
"உணர்ந்தவர்களையே ஆராயவேண்டுமென்று சொல்ல வில்லையே அவர்? உணராதவர்களைத்தானே ஆராயவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்? தெரிந்த பின்பு தெளியலாம். தெளிந்தபின்பும் தெரிய முயல்வது குறும்பு, அல்லது அநீதி..."
"நீதி எது அநீதி எது என்பதை உங்களைப்போல் அரச குடும்பத்தார் அறிந்திருப்பது நியாயமே! இப்படித் தர்க்கம் செய்பவர்கள் எப்போதும் அறிவுக்கு மதிப்பளிக்கிற அளவு உணர்ச்சிக்கு மதிப்பளிப்பதில்லை..."
"அறிவும், உணர்வும் வேறுவேறென்று நினைப்பதால் தான் உனக்கு இப்படிப் பேசத்தோன்றுகிறது. அறிவும், உணர்வும் உள்ளங்கையும் புறங்கையும் போன்றவை கலைஞனிலிருந்து அரசன்வரை இதில் மாறுதல் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை." - "அப்படியே இருக்கட்டும்! தயைசெய்து என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள். நான் சொற்களால் ஏழை; என்னிடமிருப்பவை ஆடம்பரமில்லாத எளிய சொற்கள். அவை தருக்க ஞானத்தாலோ, விவகார ஞானத்தாலோ கூராக்கப் படாதவை..."
“எளிய சொற்களுக்கு அவை எளிமையானவையாய் இருப்பதே ஒரு பெரிய வலிமை..."