பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

91


இல்லாத காரணத்தால் கட்சியும் கமலக்கண்ணனுடைய தினசரியை ஒப்புக்கொண்டிருந்தது.

கட்சிக் கூட்டங்களுக்காகப் பிரசாரத்திற்குப் போகிறவர்களுக்குக் கார் பிரயாணப்படி செலவு போன்றவற்றிற்கு எல்லாம் கமலக்கண்ணன் தன்கையிலிருந்தே தாராளமாகச் செலவழித்துக்கொண்டிருந்தார். கட்சியின் முழுஇயக்கமும் ஏறக்குறைய அவர் கையில் இருப்பதுபோல் வந்துவிட்ட இந்த நிலையில் தான் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு சலசலப்பு உண்டாயிற்று. கட்சியின் நகரக் குழுவில் உள்ள உறுப்பினர்களும், தலைவரும் செயலாளரும் கமலக்கண்ணனை எதிர்க்க முடியாதவர்களாக இருந்தனர். ஆனால் கட்சி ஊழியர்கள்—உண்மைத் தொண்டர்கள், கட்சியின் அடிப்படை இலட்சியங்களை ஆன்ம பலமாகக் கொண்டவர்கள் கமலக்கண்ணன் போன்றவர்களை எதிர்ப்பதற்குச் சமயத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஊழியர்களின் மனப்போக்கைப் புரிந்து கொண்டு கட்சித்தலைவர்—நீண்ட நாட்களாக ஊழியர் கூட்டத்தைக் கூட்டாமலே தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தார். கடைசியில் ஒருநாள்—ஊழியர்களில் முக்கியமான சிலர் கட்சித் தலைவரை அவருடைய வீட்டிற்கே தேடிக்கொண்டு வந்து விட்டார்கள். தலைவர் அவர்களை நாசூக்காக வரவேற்றார்.

“வாங்க! என்ன சேதி கட்சி நிலைமை எப்படி இருக்கு ஊழியர்கள் மத்தியிலே கட்சியைப்பற்றி என்ன பேசிக்கிறாங்க...?”

“ஊழியர்கள் மத்தியிலே கட்சியைப் பற்றி இருக்கிற அதிருப்தியைச் சொல்றதுக்காகத் தான் நாங்களே இங்கே தேடி வந்தோங்க கட்சியிலே மேல் மட்டத்திலே இருக்கிற வங்க ஊழியர்களின் மனச்சாட்சியை மதிக்கிறதே இல்லேன்னு நினைக்கிறாங்க ஊழியர்கள் கூட்டத்தையே கூட்டி அதிக நாளாச்சுங்க. இந்த நிலைமைக்காக ஊழியர்கள் ரொம்ப வருத்தப்படறாங்க..." என்று ஊழியர்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/93&oldid=1048347" இலிருந்து மீள்விக்கப்பட்டது