பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

113


சேரிக்கு விஜயம் செய்த தினத்தன்று மாலையிலேயே தனித்தனியாக நான்கு ஆட்களுக்கு மேல் முதலில் பிரகாசத்தைத் தேடி வந்து அப்புறம் பிரகாசம் அவர்களைக் கமலக்கண்ணனிடம் அழைத்து வந்து தலையைச் சொறிந்து கொண்டு நின்றார். அவர்களுக்கும் பிரகாசம் சொன்ன தொகையை மறுக்காமல் கொடுத்தனுப்பினார் கமலக்கண்ணன்.

“வீடுகளிலே நீயும் உன் ஃபிரண்ட்ஸும் போய் மஞ்சள்—குங்குமம் கொடுத்து ஒட்டுக்குச் சொல்விட்டு வரணும்...” என்று மனைவியிடம் வேண்டினார் கமலக்கண்ணன்.

“ஏன் அந்த மாயாவையே போகச் சொல்லப் படாதோ? ஒருவேளை நான் போனா ஒட்டுக் குறைஞ்சு போனாலும் போயிடலாம். எனக்கும் என் ஃபிரண்ட்ஸுக்கும் கவர்ச்சி ஒண்ணும் கிடையாது” என்று அந்த அம்மாள் பதிலுக்குக் கிண்டிலில் இறங்கினாள்.

“வீணா வம்பு பண்ணாதே! உன் மாதிரி யாராலியும் கவர்ச்சியா இருக்க முடியாது. நீ மனசு வச்சா எத்தினி காரியத்தையோ சாதிக்க முடியுமே...!” என்று சொந்த மனைவியிடமே வேறெங்கோ பேசுவது போல் செயற்கையாகப் புனைந்து பேசினார் கமலக்கண்ணன்.

அந்த அம்மாள் முகம் ஒரளவு மலர்ந்தது.

10

தேர்தல் நாள் நெருங்க நெருங்கக் கமலக்கண்ணனுக்கு ஒரே கவலையாக இருந்தது. செலவை நினைக்கும் போதும் பயமாக இருந்தது. ‘தோற்றுவிட்டால்?’ என்று நினைக்கும் போதோ அதைவிடப் பயங்கரமாக இருந்தது. பிரகாசம் ஏதோ பெட்ரோல் செலவுக் கென்று வந்து பணம் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/115&oldid=1048392" இலிருந்து மீள்விக்கப்பட்டது