பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

புறநானூற்றுச் சிறு கதைகள்


போய்க் கொன்றுவிட்டான். அன்றிலிருந்து அவனையும் அவன் வம்சத்தினரையும் பெண் கொலை புரிந்த பாவத்திற்காகப் புலவர்களும், அறவோர்களும் ஏறெடுத்துப் பார்ப்பதும் இல்லை.உன் நண்பன் இளவிச்சிக்கோ அந்த நன்னனுடைய மரபிலே தோன்றியவனாகையால் நான் அவனை வணங்கி வரவேற்கவில்லை. காரணம் இதுதான்” புலவர் கூறிமுடித்தார். கண்டீரக்கோ பெருமூச்சு விட்டான். விச்சிக்கோ உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான், அது காலியாக இருந்தது!

பண்டும் பண்டும் பாடுநருவப்ப
விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅற்
கிழவன் சேட்புலம் படரி னிழை யணிந்து
புன்றலை மடப்பிடி பரிசி லாகப்
பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீரக்கோ னாகலி னன்று
முயங்க லான்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருகனன்றியு நீயு
முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப்
பாடுநர்க் கடைத்த கதவி னாடுமழை
யணங்குசா லடுக்கம் பொழியுநும்
மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே (புறநானூறு - 151)

பண்டு = முன்பு, சிமைய = உச்சி, வரை = மலை, இழை = ஆபரணம், பிடி=பெண் யானை, தம்பதம் = தம் தரமறிந்து, முயங்கல் =தழுவிக் கொள்ளுதல், மருதன்=மரபில் வந்தவன், அடுக்கம் = மலை, மணங்கமழ் = மணம் வீசும், வரைந்தனர் = நீக்கினர்.


35. வீரப் புலியும் வெறும் புலியும்

இருங்கோவேள் பெரிய வேட்டைக்காரன். வில்லும் கையுமாகக் காட்டுக்குள் நுழைந்துவிட்டான் என்றால் மிருகங்கள்