பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பார்த்தசாரதி

153

விறகு வெட்டிக் கொண்டும், வேட்டி துவைத்துக் கொண்டும், சாதகம் செய்து சங்கீதம் பழகுகிற மாதிரி நேரத்தை வீணாக்காமல் தமிழ் படித்தார்கள்.

திருவாரூர் இலக்கண விளக்கப் பரம்பரை சதாசிவ நாவலர் வீட்டில் தங்கி, நாலைந்து மாணவர்கள் தமிழ் படித்து வந்தார்கள். நாவலர் அவர்களுக்கு யாப்பருங்கலக் காரிகை என்னும் தமிழ் நூலை அப்போது கற்பித்துக் கொண்டிருந்தார். நாளைக்கு எந்தப் பகுதியைச் சொல்லிக் கொடுக்கப் போகிறாரோ, அந்தப் பகுதியை முதல்நாளே மனப்பாடம் பண்ணி விட வேண்டுமென்று மாணவர்களுக்கு நிபந்தனை போட்டிருந்தார் சதாசிவநாவலர். மனப்பாடம் செய்யா விட்டால் பாடம் மேலே நகராது. காரிகைச் செய்யுட்கள், கட்டளைக்கலித் துறை என்னும் பாடல் வகையைச் சேர்ந்தவை.இனிய சந்தத்தோடு படித்தால் விரைவில் மனப்பாடம் ஆகிவிடும். ஆனாலும் மாணவர்களுக்குச் சில தர்மசங்கடமான நிலைகள் ஏற்பட்டு விடுவது உண்டு. சதாசிவ நாவலர், “நாளைக்குள் பத்துக் காரிகைச் செய்யுள் ஒப்பிக்க வேண்டும்” என்று கண்டிப்பாகக் கட்டளை இட்டிருப்பார். அதே சமயத்தில் வீட்டு வேலைகள் எதையாவது செய்யச் சொல்லிச் சதாசிவ நாவலருடைய மனைவியும் மாணவர்களுக்குக் கட்டளை இட்டு விடுவாள். அந்த அம்மாளுடைய கட்டளைகளையும் தட்டமுடியாது. மாணவர்கள் அவர்களிருவருக்குமே நல்ல பிள்ளைகளாக வேண்டும்.

இப்படிப்பட்ட சமயங்களில் இரண்டு வேலைகளையுமே சாமர்த்தியமாகச் செய்து விடுவார்கள், சதாசிவ நாவலருடைய மாணவர்கள். அதாவது நாவலரின் மனைவி எந்த வேலையைச் செய்யச் சொல்லுகிறாளோ, அந்த வேலையைச் செய்து கொண்டே ஒரே சமயத்தில் பாட்டையும் இரைந்து சொல்லி உருப்போட்டு விடுவார்க்ள்.

நாவலருக்குத் துரதுவளைக் கீரை மேல் உயிர. தூதுவளை வற்றல், தூதுவளைக் காய்க் கூட்டு என்று அதைப் பல்வேறு வகையில் பக்குவப்படுத்தி உண்பார் அவர். அவருக்குப் பிடித்தமான கறிவகை அதுதான்.