பக்கம்:வேமனர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அவரிடம் அமைந்திருந்தது.... வேமனர் உண்மையில் முக்கியமாக எள்ளி நகையாடுபவர் மட்டிலும் அல்லர்; உண்மையில் அவர் ஒரு சீர்திருத்தவாதியும் கூட. தன் நாட்டு மக்களின் முன்னேற்றத்தின் பொருட்டுத் தன்னிடம் வாழ்க்கைக் குறிக்கோள் ஒன்றிருப்பதை உணர்ந்தார்; அதனைத் தான் நிறைவேற்றுவதில் எந்தவிதச் சலுகையும் குறுக்கிடுவதற்கு அனுமதிப்பதில்லை... பெரும்பான்மையான இந்தியச் சிந்தனையாளர்களின் கொள்கைக்கு மாறாக வேமனரின் அகிலத்தைப் பற்றிய கொள்கை முக்கியமாக உலகமே கடவுள் என்ற மாயாவாதக் கொள்கையைச் சார்ந்திருப்பதைவிடக் கடவுளுண்டு என்ற கொள்கையில் தான் அதிகமாகச் சார்ந்திருந்தது. யாவற்றிற்கும் மேலான உயிருக்கும் (பரமான்மா) தனிப்பட்டவர் உயிருக்கும்(சீவான்மா) உள்ள வேற்றுமையை அவர் ஏற்றுக்கொண்டார். யாவற்றிற்கும் மேலான ஆற்றல் ஒன்றின்கீழ் மனிதர்கள் யாவரும் கைப்பாவைகள் என்று கருதுவதினின்றும் தன்னைத் தவிர்க்கக்கூடிய மனித சித்தத்திற்கு ஓர் இடத்தையும் முக்கியத்துவத்தையும் ஒதுக்கி வைக்கின்றார். மிக்க ஆற்றலுடனும் அக்கரையுடனும் வறட்டுத் துறவினைப் பலரறியப் பழித்துக்கூறினர்; அது ஒரு விக்லிஃபுக்கோ அல்லது ஒரு லூதருக்கோ செல்வாக்குத் தந்திருத்தல் கூடும்.

ஒழுங்காக வளர்ந்து வரும் வேமனரின் இலக்கியப் புகழ் ஒரு புறமும், இந்தியாவில் மாறிவரும் சமூக சமய நீதி பற்றிய சூழ்நிலை மற்றொறுபுறமும் வேமனரின்மீது ஆய்ந்துகொண்ட மௌன வெறுப்பினைப் போற்றிக் காத்ததற்குத் தெலுங்கு இலக்கிய உயர் மட்டப் புலவர்கட்கு அதிகமான சிரமத்தைத் தந்தன. எல்லாவற்றையும்விட இலக்கியத் திறனய்வு பற்றிய ஒரு புதிய நூலில் நெருக்கி நிரப்பப்பெற்ற வெடிமருந்து இதுகாறும் தாக்குதலுக்கு அசையாதிருந்த அரணில் முதல் பெரிய பள்ளத்தை உண்டாக்கியது. 'கவித்வ தத்துவ விசாரமு' என்ற தலைப்பினையுடைய நூல் முதன்முதலாக 1914-இல் டாக்டர் சி.ஆர். ரெட்டி என்ற பெரியாரால் வெளியிடப்பெற்றது. தன்னுடைய தந்தையாரால் கற்பிக்கப்பெற்றுச் சிறு பருவம் முதற்கொண்டே டாக்டர் சி.ஆர். ரெட்டி பண்டைய தெலுங்கு இலக்கியங்களில் பழக்கப்பட்டவராக இருந்தார். பின்னர் சென்னையிலும் கேம்பிரிட்ஜிலும் அவர் பெற்ற கல்வி மேனாட்டு இலக்கியங்களில் மிக நல்லதாக இருக்கும் பகுதியில் நல்ல பழக்கத்தை உண்டாக்கியது. இயற்கையாகவே கூரிய அறிவும் ஒளிர்விடும் சொல்திறமும் அவரிடம் வாய்த்திருந்தன. மன இயல்பாலும் பயிற்சியாலும் தன்னுடைய நோக்கிலும் போக்கிலும் தற்காலத்திற்குரிய புதுமையைப்பெற்றிருந்தார். தன்னுடைய இலக்கியத் திறனனாய்வு நூலில் தன்னுடைய இயற்கைத்[1]

  1. 15
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/22&oldid=1242417" இலிருந்து மீள்விக்கப்பட்டது