பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

திருவிளையாடற்புராணம்


"கைக்கு எட்டியது" என்று அவன் தருக்குக் கொண்டான்

முனிவர்கள் கற்றவர்கள்; சபிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்; அவர்களிடம் இவன் ஆணை செல்லாது; அவர்களை மதிக்காமல் செல்க விரைவில் என்றான். விரைவில் என்பதற்கு "சர்ப்ப" என்று கூறினான். சர்ப்ப என்ற சொல்லுக்குப் பாம்பு என்ற ஒரு பொருளும் உண்டு. 'சர்ப்ப' என்றதும் அவனைச் "சர்ப்பமாகுக" என்று எழுவருள் தலைவரான அகத்தியர் அவன் வேண்டுகோள்படி சாபமிட்டார். ஏணிப்படியில் அடி எடுத்து ஏறியவன் பாம்பின் வாயில் விழுந்து பரமபத நிலையில் இருந்து பாதாள உலகத்தை அடைந்தான். மண்ணுலகில் விழுந்து பாம்பாகப் புரண்டு இந்திரப் பதவியை ஒரு நொடியில் இழந்துவிட்டான். உயர் பதவியில் இருக்கிறவர் விழிப்போடு நடந்து கொள்ளாவிட்டால் எவ்வாறு பெரிய இழப்புக்கு உரியவர் ஆவார் என்பதற்கு அவன் செயல் படிப்பினையாக அமைந்தது.

நகுடனை இழந்தவர்கள் மறுபடியும் இந்திரன் வேண்டுமே என்று தேடினர்; புதிய தலைவனைக் கொண்டு வந்தால் புதிய சிக்கல்கள் உண்டாகின்றன. அதனால் பழைய தலைவனே தேவை என்பதை உணர்ந்தனர். அதனால் பிரகஸ்பதியைத் தேடி அவரிடம் முறையிட்டுத் தம் தலைவன்செய்த தவற்றைமன்னித்து அவனைக் காக்கும்படி வேண்டினர்.

தாமரைத் தண்டில் ஒளிந்து கிடத்த அமரர் கோனை ஆசிரியர் அழைத்து எழுந்து வரச் செய்தார்; எனினும் அப்பாவம் அவனை விடுவதாக இல்லை; என் செய்வது ஆசிரியர் அதற்குரிய வழியைச் சொன்னார்.