பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

இவர் பாடல்கள் 4, 5, 6, ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சுந்தரர்

திருக்கயிலையில் இறைவனுக்கு மலர்த்தொண்டு செய்து வந்த இவர் அநிந்திதை, கமலினி என்ற தெய்வ மகளிர் மீது காதல் கொண்டார். அதனால் இம்மூவரும் மண்ணில் பிறந்து தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள இறைவன் திருவுள்ளம் கொண்டார். அதன்படி கமலினி பரவையாராகவும். அநிந்திதை சங்கிலியாராகவும் பிறந்தனர்.

சடங்களியின் மகளை மணம் செய்து கொள்ளாதவாறு சுந்தரரை மண நாளில் ஆட்கொண்டார் இறைவர், இறைவனைத் தோழராகக் கொண்டமையால் சுந்தரர் தம்பிரான் தோழன் எனப்பெற்றார். இறுதியில் வெள்ளை யானை மீது இவர்ந்து திருக்கயிலைக்குச் சென்றார்.

இவர் பாடிய பாடல்கள் 38,000 என்பர், கிடைத்தவை 1029; இவை நூறு பதிகங்களில் அடங்கும்.

தம்மைப் பித்தன் என விளித்ததால் இறைவன் அதனையே தம்மைப்பற்றிப் பாடுவதற்கு முதல் அடியாகக் கொடுத்தார் என்பர்.

‘அரும்பருகே சுரும்பருவ அறுபதாம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ்வயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலய நல்லூர் காணே'.

இப்பாடல், சுந்தரரது இயற்கைப் புனைந்துரைத் திறனை விளக்குகிறது.

கங்கை யாளேல் வாய்திற வாள்;
கணப தியேல் வயிறு தாரி;