பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

டாக்டர் மு. வ. வின் 'சங்க இலக்கியத்தில் இயற்கை ' டாக்டர் வ. சுப. மாணிக்கத்தின் 'தமிழ்க் காதல்', டாக்டர் முத்துக் கண்ணப்பரின் "நெய்தல் நிலம்”, டாக்டர் ரா சீனிவாசனின் - ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்' முதலியவை சங்க கால இலக்கியத்தின் திறனாய்வு நூல்களாகும்.

டாக்டர் கே. மீனாட்சிசுந்தரமும், மு. கோவிந்தசாமியும் பாரதி பா நலம் பற்றிய திறனாய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். சு. பாலச்சந்திரன் தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளைத் திறனாய்வு செய்து வெளியிட்டுள்ளார்.

டாக்டர் மா. செல்வராசன், பாரதிதாசன் கவிதைகளைத் திறனால்வு செய்து வெளியிட்டுள்ளார்.

டாக்டர் தா. வே. வீராசாமி சமுதாய நாவல்கள், நாவல் வகைகள் எனும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். டாக்டர் மா. இராமலிங்கம் 'நாவல் இலக்கியம் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பிலும், சிட்டி சிவபாத சுந்தரம் தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலும், ப, கோதண்டராமன் 'சிறுகதை ஒரு கலை' எனும் தலைப்பிலும், கா. சிவத்தம்பி தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலும் நூல்களை வெளியிட்டுள்ளனர்.

டி.கே. சண்முகம் ' நாடகக் கலை' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். டாக்டர் ஏ. ஏன். பெருமாளும் டாக்டர் இரா. குமரவேலனும் தமிழ் நாடகத்தைப் பற்றிய திறனாய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர்.

வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஓர் ஆய்வு நூல் வெளியிட்டுள்ளார். இந் நூலுக்குச் சாகித்திய அகாதமி பரிசு கிடைத்துள்ளது.