பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அதனைத் தகர்த்து எறிகிறது இந்நூல். “சம உடைமைக்” கோட்பாட்டிற்கு இழுத்துச் செல்கிறது. அறம் என்பதே வறியவருக்கு வாழ்வு அளிப்பது என்பதை வற்புறுத்துகிறது.

தனிமனிதன் வாழ்க்கை செம்மை பெறவேண்டும்; அவன் செல்வம் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

எந்தச் சமயப் பின்னணியும் இல்லாமல் மானிட நல்வாழ்வுக்கு வழி கூறும் நூல் இது.

இதனை உரைநடையாக்கம் செய்து இதன் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சியே இந்நூல். செய்திகள் மிகவும் உன்னதமானவை. அதனால் உரைநடையும் சிறப்புற அமைய வாய்ப்புள்ளது.

உரை நூல்கள் பல இந்நூலுக்கு வெளிவந்துள்ளன. உரை நூல் எழுதுவது இதன் நோக்கம் அன்று.

செய்திகளை எடுத்துக் கூறுவதே இந்நூலின் நோக்கம். இக்கருத்துகளை விரித்துக் கூறுவது இந்நூல்.

செய்திகளைக் கட்டுரை வடிவில் தந்துள்ளோம்; எனினும் மூல நூல் இவற்றிற்கு ஆதாரம்; அவை பொன்னே போல் போற்றத் தக்கவை. செய்யுள்கள் ஒப்பிட்டு நோக்கத் தேவைப்படுவன.

மற்றும் நாலடியார் செய்யுள்கள் அடிப்படை என்பதால் இவை பின் சேர்க்கப்பட்டுள்ளன.

மகத்தான செய்தி இது கூறுகிறது. மானிடத்தைச் சிந்திக்கத் துண்டுவது. தனி மனிதன் உயர்வுக்கும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் இது அரிய கருத்துக்களைத் தருகிறது.

- ரா. சீனிவாசன்