பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

29


பண்டம் எது என்று அறியாத முண்டங்கள் சிலர் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று எதையும் மேற்போக்காகப் பார்த்து அதுதான் மெய்ம்மை என்று கருதுவர். சேலையும் பூவும் அழகுடையவைதாம்; அவற்றைக் கண்டா அவள் அழகி என்கிறாய்? ஊறுகாய் டப்பா; அஃது உடம்புக்கு ஆகாது.”

கர்வம் பிடித்தது இந்த மண்டை ஒடு; குழிந்து ஆழ்ந்து கண்டார் அஞ்ச அது சிதைந்து கிடக்கிறது. அப்பொழுதும் அது சிரிப்பதுபோல் அதன் பற்கள் விரிந்து கிடக்கின்றன. “ஏய்! நான்தான் நீ காதலித்த கண்ணம்மா; என்னைக் கடித்துத் தின்னத் துடித்துக் கிடந்தாய்; படித்து வைத்த பழங்கவிதை, அன்று முடித்து வைத்த புகையிலை. காரம் மணம் இன்று செத்துவிட்டன. என்னைக் கண்டுதான் நீ கற்கண்டு என்றாய்; சுவைத்தாய்; மிகைத்தாய், நகைத்தாய் உன் பெற்றோர் களையும் பகைத்தாய். நான் இப்பொழுது மண்டை ஓடு, இருப்பது சுடுகாடு, நான் தனிமையில் தான் இருக்கிறேன். வந்தால் இனிமையாகப் பொழுது கழிக்கலாம், பேய் வரும் என்று அஞ்சுகிறாயா அஞ்சாதே, அதுவும் என்னைக் கண்டு ஓடிவிடும், நானா. அழகி? யோசித்துக்கூறு”

முடைநாற்றம், அடைமழை; பெடைக் கழுகு; உடன் அதன் இணைப்பறவை இவை என்ன செய்கின்றன. குத்திக் குத்திக் குருதியைச் சுவை பார்க்கின்றன; தத்தித் தத்தி ரணப்படுத்தி நிணத்தில் முழுகுகிறது. கணத்தில் அந்த உடலும் மறைகிறது, இது யார்? உன் ரசிகை; இப்பொழுது அவள் இந்தப் பறவைகளுக்கு ருசிகை.