102
பெறச் செய்து, நாட்டு விடுதலைக்கு வழி கோலினார்.
இவர் 1882-ல் எட்டயபுரத்தில் பிறந்தார்; தந்தை சின்னசாமி ஐயரிடமே தமிழ் பயின்றார், வடமொழி, இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளையும் கற்றார். இவர் பாடல்கள் தேசியம், மொழிப்பற்று, இறை வழிபாடு, குழந்தைகள், பெண் விடுதலை, மாந்தர் உயர்வு முதலியவற்றை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.
‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு'
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’
‘தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம்'
முதலிய அடிகள் இவருடைய நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் விளக்குவன.
‘ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா’
குழந்தைக்கு அவர் உண்ர்த்திய அறிவுரை இது.
‘கண்ணன் பாட்டு' என்னும் தலைப்பில் காதலி, காதலன், குரு, சீடன், வேலையாள், தலைவன் முதலாய பல கோணத்தில் கண்ணனைக் கண்டு பாடுதல் புதுமை பயப்பதாகும்.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’
என்றும்,
‘ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே’