பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்சுமந்த படலம்

167


"யார் இங்கே வா" என்று அழைத்தான்.

பார் மகிழப் பாடிக் கொண்டே வந்து நின்றான்.

"உன்னைப் பார்த்தால் வேலை செய்பவன் போல் தெரியவில்லை"

"கண்ணுக்குச் தெரியாது; ஆனால் நான் தான் இருந்து ஆற்றுகிறேன்" என்றான்.

"மண்ணைச் சுமக்க வந்த நீ பண்ணைச் சுமந்து பாடுவது ஏன்?"

"கோயிலில் இசை கேட்டுப் பழக்கம்"

"மற்றவர்கள் எல்லாம் தம்பங்கை முடித்து விட்டார்களே" என்றான்.

"பிட்டுக் கிடைத்திருந்தால் அவர்களும் தின்று இருந்திருப்பார்கள். சுவை என்னைக் கட்டுப்படுத்திவிட்டது"

"சுவைபடப் பேசுகிறாய்" கவைக்கு நீ உதவமாட்டாய்" என்றான் அரசன்.

"உன் பெயர் என்ன?"

"அழகாக இருப்பதால் சுந்தரன் என்று அழைப்பார்கள். முடியில் பிறை அணிந்திருந்தேன்; அதனால் சோமசுந்தரன் என்றும் கூறுவர்".

"உன் ஊர் எது?”

"இனிமை மிக்க மதுரை"

"எங்கே தங்கி இருக்கிறாய்?"

"வீடு என்பது எனக்கில்லை; கோயில் சுடுகாடு"