பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

173


திருஞானசம்பந்தர் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு இறைவனைப் பாடி ஒரு திருக்கூட்டத்தோடு மதுரை வந்து சேர்ந்தார். அங்கே வாசீசர் என்ற முனிவர் அவரை வரவேற்றுத் தம்முடைய திருமடத்தில் தங்குமாறு வேண்டிக்கொண்டார். அதற்கு அவரும் இசைந்து ஓர் இரவு அங்குத் தங்கித் திருவமுது செய்தார்.

ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த சமணர்கள் அவரை அங்கேயே ஒழித்து விடுவது என்ற முடிவு செய்தனர். அவர் இருந்த மடத்துக்குத் தீவைத்தனர். அத் தீ அவரைப்பற்றவில்லை. அந்தச் சமணர்கள் மூட்டிய தீ பாண்டியனைப் பற்றுக என்று ஏவிவிட்டார். அது வெப்ப நோயாக அவனைப் பற்றி எரிந்தது.

அரசனுக்கு வெப்ப நோய் வந்தது குறித்து மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மிகவும் வருந்தினர்; மருந்துகள் பலவும் தந்து அரசனைக் குணப்படுத்த முயன்றனர். மருத்துவம் அவரைக் குணப்படுத்தவில்லை; மதிமிக்க மாந்தரீகம் அவரைத் தொட்டுத் துயர் நீக்க முயன்றது. சமணர்கள் தொடத் தொட வெப்பம் மிகுந்ததேயன்றிக் குறைந்தபாடு இல்லை. சமணத் திறம், அதன் நிபுணத்துவம் அவற்றில் அரசனுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.

அந்த நிலையில் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அரசனை அணுகி "நோய்தீர வழி உள்ளது; ஞான சம்பந்தரை அழைத்து வந்தால் அவர் திருநீறு தந்தாலே நோய் பறந்தோடும்" என்று கூறினார்.

மயிற் பீலி கொண்டு சமணர் வயிற்றில் இடப் பக்கத்தைத் தடவினர்; அது நெருப்பு வைத்துக் கொளுத்து