பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
இன்பம்

நாவலர் சோமசுந்தர பாரதியார்

இன்பம், இன்பம், என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி நாவலர், எஸ். எஸ் பாரதியாரின் கருத்து இங்கு தரப்படுகிறது.


மக்கள் மனமலர்ச்சியை 'இன்பம்’ என்பது தமிழ் மரபு. அது புறத்திருந்து ஊட்டல் வேண்டாது உள்ளத்தாறும் உணர்வின் மலராம். 'களியும்', 'மகிழ்'வும் வெளிப் பொருட்தொடர்பால் விளையும் உணர்ச்சிகள். புறத்து நிகழ்வதைப் பொறிவழி நுகர்வதால் அகத்தெழும் உவகை மகிழ்வென வழங்கும்; மதியை மயக்கும் மகிழ்வின் மிகையைக் 'களி' யெனக் கருதுவார் தமிழ் மரபுணர்வோர்.

இ.-1