பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210


எதுவுமே செய்வதில்லை. நம் வாழ்க்கை சலனமற்று, ஆணி அடித்தாற் போன்ற தேக்க நிலையைப் பெற்று விடும் என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.

எனவே, இயல்பாக இறைவன் நம்முள் பொதிந்து வைத்திருக்கும் அறிவை கல்வியின் மூலம் வளர்த்து, வளப்படுத்திக் கொண்டால் நாம் வளரவும் வாழவும் அற்புதமான வழியேற்படும். எனவேதான், அண்ணலார் வரை வந்த நபிமார்கள் அனைவருமே இறைவனிடம் அதிகமதிகம் கேட்ட துஆ ‘இறைவனே என் அறிவைப் பெருகச் செய்’ என்பதுதான். இறைவன் தந்த அறிவைப் பெருக்குவதன் மூலமாக நம் திறமையை வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். அச் சாதனைகள் பொருளை மட்டும் கொண்டு வந்து சேர்ப்பதில்லை; புகழையும் கொண்டு வந்து சேர்க்கும்.

அண்ணலார் தந்த அரும்பெரும் அறிவுரை

கல்வியின் பெருமையைப் பற்றி திருமறை மட்டுமல்ல, நபிகள் நாயகம் (சல்) அவர்களும் எடுத்துக் கூறி விளக்கியிருக்கும் ஒவ்வொரு வாசகமும் எண்ணியெண்ணி வியக்கத்தக்கனவாக அமைந்துள்ளன. 'கல்வி எங்கிருந்தாலும் அதனை முயன்று தேடிப் பெறுபவன் தூய செயல் செய்தவனாவான்’ என்பது அவரது பொன் மொழிகளுள் மிகப் பொருள் பொதிந்த வாசகமாகும். தொடர்ந்து மிக உயர்ந்த செயல்களையெல்லாம் யார் யார் தொடர்ந்து செய்ய முடியும் என்பதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

“கல்வி எங்கிருந்தாலும் அதனை முயன்று தேடிப் பெறுபவன் தூய செயல் செய்தவனாவான்; கல்வியின் சிறப்பையும் பயனையும் எடுத்துக்கூறி விளக்குபவன், இறைவனின் புகழைப் பாடியவனாவான்; கல்வியை நாடிச் செல்பவன் இறை துதி செய்தவனாவான்; கல்வியைக் கற்பிப்பவன் அறம் செய்தவனாவான்; தகுதி மிக்க மக்களிடையே கல்வியை பரவச் செய்பவன் இறை