பக்கம்:எக்கோவின் காதல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

பழனி விடைபெற்று வீட்டுக்கு வரும் வழியில் அர்ச்சுனனைக் கண்டான்.

"என்ன அர்ச்சுனா! நாளை நடக்கப் போகும் தேர்தலில் வெற்றி உனக்கா அவனுக்கா!”

"நான் மாட்டேன் என்றேன். கேட்கவில்லை. அதுவும் கிருஷ்ணன் நிற்கும் பொழுது நான் நின்றால் அவர் வருத்தப்படுவார் என்று சொன்னேன். ஒருவரும் என் சொல்லைக் கேட்கவில்லை; வெற்றி யாருக்குக் கிடைத்தாலென்ன? நமக்கு வேண்டியது தொழிலாளர்களின் வெற்றி தானே! அந்த வெற்றிக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். அதைத் தான் நான் விரும்புகிறேன்.”

“வணக்கம். நேரமாகிறது. நான் வருகிறேன்”.

♣♣♣♣♣

ஒரு நாள் மாலை, கழகத்தில் கூட்டம் நடைபெற்றது.

"நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் நமது நலனை - உரிமையைப் போராடிப் பெற முடியும். முதலாளித்துவம் நமக்குப் பல வகையில் தீங்குச் ய்து கொண்டு வருகிறது. அத்தீங்குகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நமது கழகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, அதையறிந்து நாம் வேலை செய்ய வேண்டும். நமது நோக்கத்தை விட்டுக் கழகத்தை வேறு வழிகளில் செலுத்தாமல் இருக்க வேண்டும். அகிம்சை வழியிலே சென்று தொழிலாளர் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு என் சிற்றுரையை முடித்துக் கொள்ளுகிறேன்” என்று பேசிவிட்டு உட்கார்ந்தான் கிருஷ்ணன்.