இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்பம் உள்ள எறும்பே,
எங்கள் கட்டிக் கரும்பே,
துன்பம் ஒன்றும் புரியோம் ;
தின்ப தற்கும் தருவோம்.
உன்னேப் போல உழைப்போம் ;
ஊக்கம் கொண்டு பிழைப்போம்.
பொன்னின் மிக்க எறும்பே,
போக வேண்டாம் திரும்பே.
காலே தன்னில் எழுவோம் ;
கடவுள் பாதம் தொழுவோம்.
நூலைக் கற்போம் சீராய்,
நுண்ணெ றும்பே, வாராய்.