2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84

விக்கிமூலம் இலிருந்து

சீவக சிந்தாமணி[தொகு]

2. கோவிந்தையார் இலம்பகம்[தொகு]

(கோட்டிளங்)[தொகு]

கோட்டிளங் களிறு போல்வா னந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டிள முலையி னாணின் மடமக ளெனக்கு மாமான்
சூட்டொடு கண்ணி யன்றே யென்செய்வா னிவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ வென்று நெஞ்சகங் குளிர்ப்பச் சொன்னான். (76) | ( )

(தேன்சொரி)[தொகு]

தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடை யாயர்
கோன்பெரி துவந்து போகிக் குடைதயிர் குழுமப் புக்கு
மான்கறி கற்ற கூழை மௌவல்சூழ் மயிலைப் பந்தர்க்
கான்சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக வென்றான். (77) | ( )

(கனிவளர்)[தொகு]

கனிவளர் கிளவி காமர் சிறுநுதல் புருவங் காமன்
குனிவளர் சிலையைக் கொன்ற குவளைக்கண் கயலைக் கொன்
றினியுள ரல்ல ராய ரெனச்சிலம் பரற்றத் தந்து
பனிவளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். (78) | ( )

(நாழியுளிழுது)[தொகு]

நாழியு ளிழுது நாகான் கன்றுதின் றொழிந்த புற்றோய்த்
தூழிதொ றாவுந் தோழும் போன்றுடன் மூக்க வென்று
தாழிருங் குழலி னாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழைநீர் சொரிந்து மொய்கொ ளாய்த்திய ராட்டி னாரே. (79) | ( )

(நெய்விலைப்)[தொகு]

நெய்விலைப் பசும்பொற் றோடு நிழன்மணிக் குழையு நீவி
மைவிரி குழலி னாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்
பெய்தனர் பிணையன் மாலை யோரிலைச் சாந்து பூசிச்
செய்தனர் சிறுபுன் கோலந் தொறுத்தியர் திகைத்து நின்றார். (80) | ( )

(ஏறங்கோண்)[தொகு]

ஏறங்கோண் முழங்க வாய ரெடுத்துக்கொன் டேகி மூதூர்ச்
சாறங்கு மயரப் புக்கு நந்தகோன் றன்கை யேந்தி
வீறுயர் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான்
பாறுகொள் பருதி வைவேற் பதுமுக குமரற் கென்றே. (81) | ( )

(நலத்தகை)[தொகு]

நலத்தகை யவட்கு நாகா னாயிரத் திரட்டி நன்பொன்
னிலக்கணப் பாவை யேழுங் கொடுத்தனன் போக விப்பா
லலைத்தது காமன் சேனை யருநுனை யம்பு மூழ்க
முலைக்குவட் டிடைப்பட் டாற்றான் முத்துக முயங்கி னானே. (82) |
(வேறு )

(கள்வாய்)[தொகு]

கள்வாய் விரிந்த கழுநீர்ப்பிணைந் தன்ன வாகி
வெள்வேன் மிளிர்ந்த நெடுங்கண் விரைநாறு கோதை
முள்வா யெயிற்றூ றமுதம்முனி யாது மாந்திக்
கொள்ளாத வின்பக் கடற்பட்டனன் கோதை வேலான். (83) ( )

(தீம்பாற்)[தொகு]

தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர்
தாம்பாற் படுத்த வமிர்தோதட மாலை வேய்த்தோ
ளாம்பாற் குடவர் மகளோவென் றரிவை நைய
வோம்பா வொழுக்கத் துணர்வொன் றிலனாயி னானே (84) |


(இரண்டாவது கோவிந்தையார் இலம்பகம் முற்றிற்று )[தொகு]

கோவிந்தையார்இலம்பகம் பாடல் மொத்தம் 84.
தொடர்வது 3. காந்தருவதத்தையார் இலம்பகம்

[தொகு]

( )

[தொகு]

( )

[தொகு]

( )

[தொகு]

( )

[தொகு]

( )

[தொகு]

( )


பார்க்க[தொகு]

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
2. கோவிந்தையார் இலம்பகம் பாடல் 01-25
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100