உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இரத்தல்

விக்கிமூலம் இலிருந்து

49. இரத்தல்

இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர்.

-ஷேக்ஸ்பியர்

உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான்.

-லெஸ்லிங்

இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான்.

- ஹால்

இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது.

-நீட்சே

இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர்.

-ஹேவோர்ட்

★ ★ ★