13
கடல்களில் சால்மன், காட் முதலிய மீன்களும் நிறைய உள்ளன.
தொலை வடக்குப் பகுதியில் தேனீக்கள், ஈக்கள், அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள் முதலியவை குறைந்த அளவுக்குக் காணப்படுகின்றன; காரணம் போதிய பயிர்கள் இல்லா மையே ஆகும்.
இங்கு இடம் பெயரும் கடற் பறவைகளும் உள்ளன. பல வகைத் திமிங்கிலங்களும், கடல் நாய்களும் காணப்படுகின்றன. வேல்போன் திமிங்கிலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
துருவக் கரடி, கலைமான், நரி, ஓநாய், எருது முதலியவை நிலப் பகுதியில் வாழும் விலங்குகள்.
ஆர்க்டிக் விலங்குகள் பூச்சிகளையோ, புல் பூண்டுகளையோ தின்பன அல்ல. கடல் அல்லது நிலப் பகுதியில் வாழ்வதால் மீன்களையும், ஊனையுமே அவை தின்கின்றன.
அவைகளில் பல மாரிக்காலத்தில் பனி வெள்ளை நிறத்தைப் பெறும். அவ்வாறு நிற மாற்றம் பெறுபவை பறவைகள், முயல்கள் முதலியவை ஆகும். இவை கோடையில் மாநிறத்துடன் காட்சி அளிக்கும். நரியின் நிறம் கோடையில் மாக்கல் நீலமாகவும், மாரிக்காலத்தில் வெண்ணிறமாகவும் இருக்கும். துருவக்கரடி ஆண்டு முழுதும் வெண்ணிறத்துடனே காட்சி அளிக்கும்.