பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20



குக்

18- ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் ஆர்க்டிக் ஆராய்ச்சி கைவிடப்பட்டது என்றே சொல்லலாம். துருவப் பகுதிகளில் விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பயணங்களுக்குக்கூட அரசு ஆதரவு அளிப்பது அரிதாக இருந்தது.

இருப்பினும், 1778 - இல் கேப்டன் குக் என்பார் பசிபிக்கிலிருந்து அட்லாண்டிக் கடலுக்கு வட கிழக்கு அல்லது வட மேற்கு வழியைக் காணுவதில் முயன்றார். 1815 இல் வட மேற்கு வழியைத் தேடுவதில் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட் டது. புத்துயிர் அளிக்கும் இம்முயற்சியில் எட்வர்டு பேரி, ஜான் பிராங்கிளின் முதலியோர் ஈடுபட்டனர்.

பேரி

1827 இல் ஆர்க்டிக் ஆராய்ச்சியில் புதுத் திருப்பம் ஏற்பட்டது. இந்த ஆண்டில் பேரி என் பார் வட முனையை அடைய முயன்றார். கப்பலை விட்டு வடக்கே படகுகளில் சென்றார். படகுகளை இவரது குழுவினர் பனிக்கட்டியில் இழுத்துச் சென்றார்கள். ஆனால், பருவநிலை குறுக்கிட்டதால், இவர் வட முனையை அடைய முடியவில்லை. இவருக்குப்பின் பலர் சென்று பல புதிய பகுதிகளைக் கண்டறிந்தனர்.