பாரதியின் இலக்கியப் பார்வை/திறவுகோல்

விக்கிமூலம் இலிருந்து
திறவுகோல்

பாரதி பருந்துப் பார்வைக் கவிஞர். அப்பார்வை இலக்கியத்திலும் பாய்ந்தது. என் பார்வை அதிற் பதிந்தது. இச்சிறு நூல் பிறந்தது

இஃது ஒரு சொற்பொழிவின் முற்பகுதி. நாகைத் தமிழ்ச் சங்கச் சிலப்பதிகார வகுப்புத் தொடக்கமாகவும், சிங்கப்பூர் வானொவிலும் பொழியப் பெற்றது.

இது பதிப்பில் இரண்டு. முதற்பதிப்பு ஒரு முத்திரை கொண்டது.

அச்சுத்தொழிற் பயிற்சியுடைமையால் குறிப்புகளைக் கொண்டு அச்சுக் கோத்தேன்; அச்சேற்றினேன்; நூற்கட்டாக்கி உருவாக்கினேன்; அச்சுத் தொழிலாளி புலவனாகி எழுத்தாளனாகியதன் முத்திரை அது.

இப்பதிப்பில் பொறுக்குவேலை இல்லை. கருத்தைப் பெருக்கியுள்ளேன்.

இலக்கியப் பேழைக்குப் பாரதியும் ஒரு திறவு கோல். அவர்க்கு இந்நூல் ஒரு திறவுகோல்.

இது பாரதி நூற்றாண்டு, அவர் பிறவி நாளன்று திறவுகோலைப் படைக்கிறேன். திறந்து சுவைக்கலாம்.

அன்பன்,
கோவை. இளஞ்சேரன்.