பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.

அவனுக்கே உண்டு என்றும் கூறி வாலியின் மலைr அழைத்து “ நீ இராவணனிடம் சென்று சீதை பைச் சிறை நீக்கம் செய்கின்றனையா ? அன்றிப் போருக்கு வருகின்றனையா? இந்த இரண்டில். 67தைச் செய்ய இருக்கின்றாய்? என்று கூறி ஒரு முடிவு பெற்று வருக" என்று ஏவினர்,

தான் தூதனாகச் செல்ல வேண்டிய பொறுப்பு ஏற்பட்டதே என்ற உள்ளக் களிப்பினால் அங்கதன் உடல் பூரித்தனன், அவன் தோள் கள் குன்றினும் பொலிவுற்றுத் தோன்றின.

அங்கதன் இராமர் திருவடிகளில் நிலனுறப் பொருந்தி வணங்கினான். “மாருதிக்கு அடுத்தபடி நம்மைத்தான் இராமர் எண்ணியுள்ளார் போலும்! எனக்கு நிகர் யாவர் உளர்?” என்று எண்ணி மகிழ் வுற்றான். அம்மகிழ்வு காரணமாகச் சிங்கம் ஒன்று ஆகாய வழியே செல்வது போலவும், இராமர் தம் வில்லில் தொடுத்துவிட்ட அம்பு வேகமாகப் போவது போலவும் வான்வழியே சென்றான்.

அரக்கரை வென்று அமைதி நிலவச் செய்யத் திருப்பாற் கடலைவிட்டு நீங்கி அயோத்தியில் வந்து அவதரித்த திருமாலாம் இராமரது சொல்லினைத் தலைமேற் கொண்ட அங்கதன், மேருமலையினும் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த இலங்காபுரியினை அணு கினன்; இராவணனது அரண்மனையை அடைநி தனன்,

இராவணன் தன் சபையில் வீற்றிருந்த தோற் றத்தைக் கண்ட அங்கதன், பலவாறு அவனைப்பற்றி