விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/இணைப்பு 1

விக்கிமூலம் இலிருந்து

இணைப்பு 1


சேதுபதி மன்னரது மறைவு, அடக்கம் பற்றி, சென்வனை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் பொறுப்பு அலுவலர், தளபதி பர்க்லி சென்னை கவர்னருக்கு 1-2-1809 தேதி அனுப்பிய அறிக்கை நகல் (தமிழில்)

" ......அரசின் ஆணைப்படி இந்தக் கோட்டையில் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டு இருந்த இராமநாதபுரம் மன்னர் முத்து இராமலிங்க சேதுபதி, நோயாளியானதால், மருத்துவ உதவி அளிக்குமாறு மருத்துவரையும் உதவி தளபதியையும் அறிவுறுத்தினேன். அவர்களும் முறையாக அவரை கவனித்து வந்தனர். மன்னரது நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வந்ததால், அவருக்கு இடமாற்றம் அளிப்பது தேவை என்று தெரிவித்ததால், நானும் அதற்கு இசைந்தேன். அவ்விதமே 22-ம் தேதி ஒரு பாதுகாப்பு வீரர் பொறுப்பில் அவரை ஜார்ஜ் டவுனுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் 24-ம் தேதி இறந்து விட்டதாக (மருத்துவர்) மிஸ்டர் ஒயிட் எனக்கு, அறிக்கை செய்தார்.

அவரது அடக்கப்பணிகளை மேற்கொள்ளுமாறு சென்னை சர்க்காரியாபுரம் வெங்கிடாசலம் செட்டி என்ற கனவானை . கேட்டுக் கொண்டேன். அதனை, எல்லாவகையிலும் சிறப்பான முறையில் இறந்த மன்னரது தகுதிக்கும் அவரது சாதி ஆசாாப் படிக்கும் நடத்தி வைக்குமாறு. இதனை மன்னருக்கு மாதம் தோறும் வழங்கிவந்த படிச்செலவான ரூபாய் ஆயிரத்தில் இருந்து செலவு செய்து கொள்ளலாம் என்று. எனக்கு கிடைத்த தகவல்களின்படி, அந்த ஈமச்சடங்குகள், மன்னரைச் சார்ந்து இங்கிருந்தவர்களின் அறிவுரைப்படியும், அவர்களுக்கு மனநிறைவு கொள்ளும் வகையிலும் மிகத்திரளான மக்களது முன்னிலையிலும் நடைபெற்றுள்ளன.

இவைகளை அரசினர் ஒப்புதல் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். எனக்கு அதிகாரமளிக்கப்பட்டிருந்த செலவான ரு 1000/யும் வழங்குமாறு கோருகிறேன். அந்தச் செலவிற்கான முழுப்பட்டியல் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சடங்கில் பயன்படுத்தப்பட்ட சில சாமான்களின் அளவு சடங் கிற்கு முன்னதாக மதிப்பீடு செய்ய இயலாத காரணத்தினால் ரூ 114| கூடுதல் செலவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்ததக் காரணத்தினால் மரியாதைக்குரிய கவர்னர், இந்தச்சடங்கு சம்பந்தமான முழுச்செலவினையும் அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சேதுபதி மன்னருடன் இங்கு சில பெண்கள் இருந்தனர். இவர்க ளைப்பற்றி அரசு ஆவணங்கள் எதிலும் குறிப்பிடப்பட வில்லை. மன்னரைச் சந்திக்கச் செல்லும் பொழுது, அவரும் அவர்களைப் பற்றி எதுவும் தெரிவித்ததும் கிடையாது. மன்னரை ஜார்ஜ் டவுனுக்கு அனுப்ப முனைந்த பொழுது அவர்கள் என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களை அப்பொழுது சந்திக்க இயலவில்லை. அவர்களும் அவருடன் சென்று விட்டனர். பிறகு அவர்களைப் பற்றி விசாரித்ததில் அவர்கள் மூன்று பேர் என்றும், அவர்களுக்கு மூன்று குமுந்தைகள் - (இரு பையன்கள்) இருந்தனர் என்றும் தெரியவந்தது. மன்னரது இறப்பிற்குப் பிறகு அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால், தற்பொழுது அவர்களது ஆசாரப்படியான இழவு காலம் முடிந்த பிறகு, அவர்கள் எதாவது முறையீடுகளுடன் வருவார்கள் என எண்ணுகிறேன்.

கோட்டையில் மன்னர் தங்கி இருந்த அறையில் அவரது சில பெட்டிகள் உள்ளன. அவைகளைப் பூட்டி காவலர் ஒரு வரது பொறுப்பில் அரசு ஆணையை எதிர்பார்த்து வைத்து இருக்கிறேன்.

இராமநாதபுரம் மன்னர் முத்து ராமலிங்க விஜய ரகுநாத செதுபதி அவர்களது அடக்கம் சம்பந்தமாக 23-1-1809 க்கும் 27-1-1809 க்குமிடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட செலவு விவரம்:

23- 1-1809 மன்னரது உயிர் இரவில் பிரிவதற்கு

ஏதுவாக பால்மாடும் கன்றும் தானம் கொடுக்க வாங்கியது

பக்கோடா பணம்
7.0.0

தானத்தைப் பெற்றுக்கொண்ட
பிராமணருக்கு அன்பளிப்பு

6. 0.0
இதர பிராமணர்களுக்கு 1. 19.10
தூபதானம் 2.38.20
சில்லரைச் செலவுகள் மற்றும் பூரி 5.31.70
24-1-1809 மன்னாது சடலத்தை அலங்கரிக்க கிள்ளாத் மற்றும் துணிகள் 40.0.0
தங்க தேவர்கள் பட்டம், தங்கப்பூக்கள், 10 பக்கோடா பண நிறையில் 11.11.20
வெள்ளி மலர்கள் 62. 5. பக்கோடா பண நிறையில் 5.00
இவைகளைத் தயாரித்த பொற்கொல்லாது கூலி 0. 22.40
சடங்குகள் செய்ய செப்பு பாத்திரங்கள் வாங்கியது 20.2.40
வெள்ளை மஸ்லின் துணி 1. பீஸ் 1.0.0
சாயத்துணி 1. பீஸ் 1.0.0
அரச பெண்டிரை கோட்டையிலிருந்து ஜார்ஜ்டவுனுக்கு பல்லக்கில் சுமந்துவந்த பல்லக்கு கூலி, பல்லக்கு தூக்கிகள் கூலி 1.11.20
மன்னரது குமாஸ்தாவிற்கு கொடுத்தது, தர்மச்செலவிற்காக 8.25.10
மன்னரது பணியாட்களுக்கு வெற்றிலை பாக்குச்செலவு 7.0.0
சாமரத்திற்கு தரமான மஸ்லின் துணி வாங்கியது 5.0.0
நீலவிளக்குகள் வாங்கிய வகை 2.0.0
வெடி வாணங்கள் தீவெட்டி செலவு 1.0.0
பூக்கள் 5.0.0
ஆலவட்டங்கள், வெள்ளைக்குடை, மற்றும் சில்லரைச் சாமான்கள் 15.33.0
தீபங்களுக்கு எண்ணை 11.22.0
30 விசை சந்தனக்கட்டை 7.22.4
கூலி 0.6.0
விறகு, எருவாட்டி 2.12.0
பல்லக்கு வாடகை 0.25.40
பல்லக்கு துக்கிகள் கூலி 3.10.10
பல்லக்கில் கட்ட நூல் கயிறு 0.25.40
பந்தல் பாவட்டா, மரம், மூங்கில் கழிகள் வாடகை 2.11.20
இடுகாடு செல்வதற்கு முன் வழங்கப்பட்ட பூர் 2. 31.70
மன்னரது மக்கள் சடங்கு செய்த வகையில் செலவு 0.30.20
தசதர்மம் 5. 6. 20
சடங்குச் செலவுகள் 0. 25.40
சில்லரைச் செலவுகள், பூரி 5.37.20
மன்னரது பணியாட்களுக்கு 0.12.60
இழவு வீட்டிலும், இடுகாடு செல்லும் வரையிலும் நடபாவாடை

விரித்தவர்களுக்கு

2. 0. 0
சதிராடிய தேவதாசிகளுக்கு, 5.31.20
குடிமகன், வண்ணார்கள் 1. 9. 10
25. 1. 1809 இரண்டாவது நாளில் எரிப்பதற்கு விறகு, எருவாட்டி, 0. 39 .0
பால் 1. 5.3 0
மன்னரது மூன்று குழந்தைகளுக்கு தலைப்பாகை - கோபாலசெட்டி பற்று 3. 0.0
தீப எண்ணை 4.0.0
மன்னர் குடும்பத்தினரது சாப்பாட்டுச் செலவு - கோபாலசெட்டி, செல்லையா பிள்ளை பற்று 14.19.10
வெற்றிலை, பாக்கு புகையிலை பச்சையப்பன் பற்று 8. 25.50
இரண்டாவது நாள் தானம் வழங்க பசுமாடும் கன்றும் வாங்கியது 8 0. 0
௸ தானம் பெற்றுக்கொண்ட பிராம்மணர்களுக்கு 6. 0. 0
தசதானம் 4.1.2. 60
சில்லரைச் செலவுகள் - பூரி 30.0. 0
மன்னரது பணியாட்கள் - முஸ்லிம்கள் 0. 12.60
தாணாச் சேவகர்கள் தலையாரிகள் 2.38.20
கூலியாட்கள் - 3 நாள் கூலி 5.31.70
பறையர்கள் - வண்டி இழுத்த கூலி 3. 0. 0
வண்டிக்காரர்கள் 5. 31. 70
பறையடித்ததற்கு, சாமான்கள் ஏற்றக் கூலி 2.36.20
மலபாரிகள் 2.28.20
சதிர் ஆட்டக்காரிகள் 1. 19. 10
திருவல்லிக்கேணி, பறையடித்தது 2. 38. 20
செயிண்ட் தாமஸ் மவுண்டிற்கு வண்டிக்கூலி 5. 31. 70
26-1-1809 மன்னரது சாமான்கள் ஏற்றிச்செல்ல வண்டிக்கூலி 3.22.40
சாப்பாடு தயார் செய்த பிராமணர்களுக்கு 0.38.20
குடிதண்ணிர் கொண்டுவர 0. 25. 40
27.1. 1809 மன்னரது ஆட்களுக்கு சாப்பாடு 2.0.0
சுத்தம் செய்த பணியாளர்கள் கூலி 0.25.40
படிச்செலவு 0.7.30
---------------
மொத்தம் பக்கோடா பணம் 327. 00
---------------

[1]


  1. Tamilnadu Archives, Madras — Madurai Dist. Records. Vol. 1197 - 1.2.189 - рр. 135.