பக்கம்:இராவண காவியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இராவண காவியம்

29.அங்காடு கிழக்கிருந்த தாற்கிழக்கு நாடெனவும்

முன்னோடு மருதவள முதன்மைகொடிந் திரமெனவும்

தென்னாடுந் திருநாடும் செவிகேட்கும் புகழ்வாய்ப்ப

எந்நாடு அணையில்லே மெனவேங்க விலங்கினதே.


30.அக்கிழக்கு நாட்டொடுநல் லணிகிளர்தென் பாலியும்பொன்

தொக்கிருக்கும் பெருவளமுந் தொலைவறியாத் திராவிடமும்

மக்களுக்கும் புட்களுக்கு மாக்களுக்கும் வேண்டுவன

புக்கிருக்கும் தமிழகமாப் பொருவிலவாப் பொலிந்தனவே.


ஐந்நிலம் - குறிஞ்சி

வேறு

31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந்

துவ்விய தமிழகத் துணிந்த மேலவர்

செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக்

குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம்.


32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப்

பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை

முடியது படியுற முறிக்கு மோசையாற்

படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால்.


38.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி

பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்

அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை

மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்.



29. முன்-கிழக்கு. இந்திரம்-கிழக்கு, தலைமை.

31. குவ்வை -கூட்டம், 3 , யா-ஒருமரம், படி-நிலம்,

33. முருகியம்-குறிஞ்சிப்பறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/40&oldid=1203536" இலிருந்து மீள்விக்கப்பட்டது