பக்கம்:இராவண காவியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகப் படலம்

9


13.மைளம் பட்ட வளக்கும் ரிக்கும்

நொய்வளம் பட்டவைந் நூறுகற் றெற்கில்

பைவளம் பட்டநீள் பஃறுளி யாறு

பெய்வளம் பட்டுப் பெருகியே சென்ற.


14.இன்னு முகிலின மேயபல் குன்றுந்

துன்னுபல் லாறுந் தொகுவளஞ் செய்ய

என்னிலை யென்றவ் விருநில மங்கை

மன்னு பெருவளம் வாய்ந்து பொலிந்தாள்.


தென்பாலி

15.அப்பெரும் பஃறுளி யாற்றின தெற்கில்

திப்பிய தென்கடல் தெற்கின தாகக்

கப்பிய பல்வளங் காமுற யாரும்

நப்புகழ் மேயதென் பாலி நளியும்,


16 இடைநில மைந்துநா றெண்ணரு கல்லிற்

படவொளி மேய பவளமு முத்தும்

கொடுகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு

கடல்வளங் கண்டு களித்ததந் (நாடே,


பெருவளம் தென்பாலி

17.குணகரை குன்றங் குறும்பனை யோடு

மணமிகு தெங்க மதுரைமுன் பாலை

இணருபின் பாலையோ டேழ்தலை மேய

உணவமல் நாற்பதோ டொன் பது நாடே.



17.

13. நொய்--மென்மை . பை-பசுமை, அழகு.

பெய்வளம்-மழைவளம்,

14, 'என் நிலை'--தருக்குச் சொல்.

15. ந - சிறந்த. நளியும் - பரந்திருக்கும்.

17. இண ரி தல் - நெருங்குதல். அமலு தல்-பெருத்தல்.

ஏழ் தலைமேய் - ஏழ்என் னும் எண் ணை முதலிலு

டைய், ஏழ்குணகரை நாடு, ஏழ்குன்றநாடு. ஏழ்

குறும்பனை நாடு, ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரைநாடு,

ஏழ்முன்பாலை நாடு, ஏழுபின்பலைநாடு எனக்

கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/37&oldid=1198289" இலிருந்து மீள்விக்கப்பட்டது