பக்கம்:இராவண காவியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வோமென்றனன்.இராவணன் வெகுண்டு அவையை விட்டோட்டினன்.

அவையை விட்டுச் சென்ற பிடணன் -நீலன், வேலன்,குயிலன், சேரி என்னும் படைத் தலைவருடன் சென்று அடைக்கலமென ராமன் காலில் விழுந்தான். அவன் புகல் தந்து அப்போதே இலங்கை யரசனாக அவனுக்கு முடி சூட்டினான்,பீடணன் இலங்கையை எளிதில் வெல்வதற்கான உளவையெல்லாம் உரைத்தனன்.

இதையறிந்த இராவணன் கடுஞ்சினங்கொண்டு போர்க்குத்தயாராகும்படி படைத்தலைவருக்குக் கட்டளையிட்டான். தானே தலைவர் முரசறைவித்தனர், தமிழ் மறவர் போர்க்கோலம் பூண்டு திரண்டனர்

பொழுது புலர்ந்ததும் புகைப்படை நகர்ப்புறத்து வந்து தங்கிற்று. இராவணன் கோட்டையைக் காப்பமைக்கும்படி கட்டளை யிட்டுப் பகைப்படை நிலைமையை அறிந்துவர ஒற்றரை ஏவினான். பீடணன் அவரைக் காட்டிக் கொடுத்தனன். ராமன் அவரைச் சிறையிட்டனர். இவ்வாறு பல முறை காட்டிக் கொடுத்தனன் அக்கடை மகன்,

ஆரியப்படை ஊரை முற்றியது, மதில் போரில் வடவர் படை தோற்றது. களங்கண்டு பொருந்தனர், இரண்டு நாள் இரவும் பகலும் ஓயாது போர் நடந்தது. இருபடையிலும் பலர் மாண்டனர்.

கும்பகன்னனுக்கும் ராமனுக்கும் கடும்போர் நடந்தது.ராமன் சமயம் பார்த்து முறையின்றிக் கைகால்களை யறுத்துக் கொன்றான், செய்தி கேட்ட இராவணன் கதறிப் புலம்பச் சேயோன் தேற்றிச் சென்று போர்க்களம்புக்கான்.

ஓரிடத்தில் கும்பலாக இருந்த ஆரியப்படையோடு தனியாகப் பொருது கொண்டிருந்தான், பீடணன் ராமனிடம் கூறி இதுவே அவனைக் கொல்ல ஏற்ற கால மென்றான். ராமனேவ லக்குவன், பீடணன், சுக்கிரீவன், அனுமன் முதலியோர் பெரும் படையுடன் சென்று வளைத்துப் பொருந்தனர். ஒருவன் பின்னாலிருந்து தேர்ப்பாகனைக் கொன்றான். பீடணன் குதிரைகளைக் கொன்றான். முடிவில் சேயோன் அம்புக் கூடுவறிது பட்டது.வாள் முதலிய கொண்டு பொருதான. அந்தோ! முடிவில் லக்குவன் ஓரம்பை யேவித் தமிழர்குலக் கொழுந்தைத் தலையையறுத்துக் கொன்றனன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/27&oldid=1157786" இலிருந்து மீள்விக்கப்பட்டது