பக்கம்:இராவண காவியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. உழுந்தொ ழிற்குரித் தாகவே ஒழிந்த யாவு முஞற்றலான் பழந்த மீழ்வகுப் பாரெலாம் உழுந்தொ ழிற்கொ ளுமவரே. 12. தாளி னாற்பொருள் தருவதை வேளெ னப்பொருள் விள்ளுவர் நாளு மேதொழில் கன்குசெய் தாளு வோர்கள்வே ளாளரே. 13. இத்தொ ழிலிவர்க் கின்றெனா எத்தொ ழிலுமெ வாருஞ்செய் தத்தொ ழிற்குரி யார்களாய் ஒத்து வாழ்ந்த ரொருங்கரோ. 14. மன்ன ராகலாம் பின்னரும் மன்னர் பின்னரின் வாழலாம் அன்னர் யாவரு மந்தணர் பின்னென் வேற்றுமை பேசலே', 15. அரச ரில்வழி யந்தணர் அரச ராயுல காளுவர் வரிசை பெற்றுயர் மற்றரும் அரசு தாங்குவ ரங்ஙனே. 16. முல்லை யேமுத லாகிய நல்லி யல்புறு நானிலத் தெல்லை மேவிய யாவரும் இல்லை வேறிவ ரின்றியே. முல்லை யாயர் குறிஞ்சியின் எல்லை காணி னிறவுளர் செல்லி னெய்தல் தமிலரே ஒல்லி வாழி அழவரே. 12, தாள்-முயற்சி. வேள்--உதவி. 17, இறவுளர்--- குறிஞ்சி நிலமக்கள். ஒல்லி-பொருத்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/52&oldid=987550" இலிருந்து மீள்விக்கப்பட்டது