16.
51.கடிக்கமழ் மராமலர்க் கண்ணி யஞ்சிறார்
படிக்குற வெருத்துக்கோ டன்ன பாலைக்காய்
வெடிக்கவிட் டாடிட விரும்பிக் கோலினால்
அடிக்குமோ சையிற்பருந் தஞ்சி யோடுமே.
52.பொருந்திய நண்பகற் போதிற் காளையின்
திருந்திழைக் கன்னியுஞ் செல்லக் கண்டுமே
இருந்துமே யெம்மனை யின்று நாளை நீர்
விருந்துண்டு சென்மென வேண்டிக் கொள்வரே.
53. தோட்டுணை யாகவே சரிமென் கூந்தலைக்
கூட்டியே செல்பவன் குற்ற மற்றவன்
ஆட்டிரீ 'பிரிக்கலை' யென் றவ் வன்னையை
மீட்டுமே யூர்செல் விடுக்கு வார்களே.
54. ஒட்டிய சுற்றமாங் குறவே மீளியைக்
கட்டியே தழுவிடுங் கற்பைக் கண்டுமே
வீட்டிரு வோரையும் விலகு வார், சிலர்
இட்டிரு வோரையு மேகு வார்களே,
55. அடிபடு நிரைகவர் பறையி னார்ப்பினாற்
கொடுவரி வெருவுறா உங் கொதிகொள் வெஞ்சுரம்
துடியிடை யினை தரத் துரந்து செல்பவர்
படருற நண்பகற் பாலை மன்னுமால்.
மருதம். வேறு
56.கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும்,
முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும்,
நெல்லினைக் கரும்பு காக்கும், நீரினைக் கால்வாய் தேக்கும்,
மல்லலஞ் செருவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும்.61. கடிகமழ்-மணம்வீசும். படிக்கு உற- நிலத்தில்விழ.
5?, இன்று இருந்து விருந்துண்டு நாளை சென்மென.
68. தோள் துணை . ஆட்டி - பெண், 'அம்மா' என்றபடி..
அன்னை-செவிலி. 54. மீளி - பாலைநிலத்தலைவன்.
கற்பு-மணஞ்செய்து கொள்ளும் விருப்பம், 55. நி.ை "
ஆவினம். கொடுவரி -புலி. பட்ச்-துயர், 66, கல்-மலை.
முருகு"ன், மணம், மல்லல்-வளம், செறு -வியல்,