பக்கம்:இராவண காவியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இராவனணகாவியம்


வேறு

40.துளிரிகு கூதிரிற் றுணைமை யோடுயிர்

களிமிகி யாமமெய் கலந்தங் கின்புற

அளிமிகு காதல் ரணகி யன்பது

கொளவிட மாய்மழைக் குறிஞ்சி மன்னுமால்.


முல்லை


41. கொல்லியந் தேனெனுங் குதலை வாய்த்தமிழ்ச்

சொல்லியர் முத்தொடு துனிவு கொண் டொளிர்

பல்லென மலர்ந்தவர் பணியத் தோள்பெறும்

முல்லைப்பம் புறவடர் முல்லை காணுவாம்.


42. பூவையுங் குயில்களும் பொலங்கை வண்டரும்

பாவிசை பாடமுப் பழமுந் தேனுந்தர்

தேவிசை பெறுங்கடற் றிடையர் முக்குழல்

ஆவின மொருங்குற வருக ணைக்குமால்.


43. மக்களுக் குணவிட வளைக்கை யாய்ச்சியர்

கக்கமுக் கிடத்தயிர் கடையு மோசைகேட்

டக்கறைக் கொண்டு பார்ப் பணைக்கும் பேடையைக்

கொக்கரக் கோவெனக் கூவுங் கோழியே.


44, முதிரையுஞ் சாமையும் வரகும் மொய்ம்மணிக்

குதிரைவா லியுங்களங் குவித்துக் குன்றெனப்

பொதுவர்கள் பொலியுறப் போரடித்திடும்

அதிர்குரல் கேட்டுழை யஞ்சி யோடுமே.



மடை-சோ று. 'அயரும்' எனச் செய்யுமென்

முற்றுப் பல்லோர் படர்க்கையில் வந்தது.

பின் னும் இவ்வாறு வருவன கொள்க.

40. அளி--அன்பு , 41. புறவு-காடு. 42, கட் று--கசடு.

முக்குழல் - கொன்றை, ஆம்பல், வேய்ங்குழல்.

43. கக்கம்-தோளிடுக்கு (கிச்சு) முக்கிட-விருத்த,

பார்ப்பு-குஞ்சு. 44. பொதுவர்-முல்லை நில மக்கள்.

பொலி-தவசக்குவை, உழ்ை--ஒருவகை மான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/42&oldid=1224217" இலிருந்து மீள்விக்கப்பட்டது