பக்கம்:இராவண காவியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. தேன் பூத்த நறுந்தொடையல் திசைமணக்குஞ் செழியதமிழ்க் கோன் பூத்த மலர்வண்டார் குழலியொடு வரக்கண்டே ஊன் பூத்த வுயிரெல்லா முளம்பூத்த வுணர்வினவாய் வான் பூத்த மதிலிலங்கை மகிழ்பூத்து வயங்கினதே. 6. ஊர்மகிழ் படலம் வேறு 1, கனிமகிழ் பூத்தவந் நகர மாந்தர்கள் இனையன செய்வதென் றிறுதி யில்லராய் அனையினுஞ் சிறந்தபே ரன்பின் மிக்கராய் மனமுறத் தலைவரை வாழ்ததெ டுத்தனர். இறைவியைப் பெற்றநம் மிறைவன் வாழ்கென்பர் இறைவனைப் பெற்றகம் மிறைவி வாழ்கென்பர் இறைவியைப் பெற்றவ ரினிது வாழ்கென்பர் இறைவனு மிறைவியு மியைந்து வாழ்கென்பர். துறைமலி யகப்பொருள் தோய்ந்து வாழ்கென்பர் அறமலி மனை யற மன்பின் வாழ்கென்பர் நிறைவளந் தேங்கியே நெடிது வாழ்கென்பர் குறைசிறி தின்றியே கூடி வாழ்கென்பர். எண்ணிய பொருளெலா பூமியைந்து வாழ்கென் பர் கண்ணிய கருத்தெலாங் கனிந்து வாழ்கென்பர் உண்ணிகழ் பொருள்வெளி யுற்று வாழ்கென்பர் தண்ணிய கைவளந் தழைத்து வாழ்கென்பர். 5. செய்வதும் தவிர்வதுந் தெரிந்து வாழ்கென்பர் உய்வது முறுவது மோர்ந்து வாழ்கென்பர் கைவரும் பொருளெலாங் கண்டு வாழ்கென்பர் பெய்வது போலறம் பெய்து வாழ்கென்பர். முப்பொருட் பெரும்பயன் முற்றி வாழ்கென் பர் ஒப்பிய பொருளெலா முற்று வாழகென்பர் தப்பெது மின்றியே தழைத்து வாழ்கென்பர் மெய்ப்பொரு ளுணர்ந்துமேன் மேலும் வாழ்கென்பர். 5. உய் தல் - நீங்குதல் உ று தல்-அடைதல். 6. முப்பொருள் அறம் பொரு ளினபம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/175&oldid=987668" இலிருந்து மீள்விக்கப்பட்டது