பக்கம்:இராவண காவியம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இராவண காவியம் 47. ஆக்க வும்பின் னழிக்கவும் வல்லதா வீக்க தீமொழி மேவுதம் மேலவர் நீக்க மின்றி நிலைத்தவ ரென்றுமுத் தீக்கை யாளரென் றும்புகல் தீக்கையர். 47. தேவ ரோடுமத் தேவர்க்குந் தேவராம் மூவ ரோடு முனிவர் தொடர்புகொண் டாவ தாக்கி யவசிங் கிவரங்கும் போவ ரென்றும் புளுகும் புரட்டர்கள், 49. தேவர் தங்கள் திருவிறக் கமென்றும் தேவ ரோடு திருமண முண்டென்றும் மாவும் புள்ளு மரபென்று மற்றுயிர் யாவும் பேசின வென்னு மளப்பர்கள். 50, தாய்க்கு வத்தினர் தம்மையே தேவர்க எரக்கி மக்கள்செய் யாதன செய்ததா வாய்க்கு வந்த படியெலா மக்களை ஏய்க்க வேபொய் யியம்: புமே மாற்றினர். 51. இயவி லாதவை யெண்ணில தம்மவர் செயல் தாக்கித் தெறித்துப் பழங்கதை பயில வாக்கிப் பகுத்தறி வோட்டியே மயல வாக்கி மதிப்படை வஞ்சகர். 52. இன் னு மென்னென வோவள வின்றியே முன்னுக் குப்பின் முரண்படச் சொல்லியே அன்ன பாவுந்தெய் வத்தொடர் பான தம் முன் ன வர்செய லென் றிடு மோசகர். 47. வீக்க-விரைந்து பற்ற இல்ல. நீமொழி-சாபம். மேலவர்-முனிவர், முத் தீ- ஆகவநீயம், காரு சித்தியும், தென் றிசை யங்கி, தீக் ைகயா- தீய ஒழுக்க முடையவர். 49. திருவிறக்கம்-அவதாரம் அளப்பர்-பொய்யர், 50. தாய்க்குலத்தினர்-தமமவர். 51. இயல் இலாதவை- தகுயற்றவை-மக்களால் செய்து முடியாதவை, பழங்கதை-புரFணம். மயல மயக்கமுடைமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/214&oldid=987719" இலிருந்து மீள்விக்கப்பட்டது