பக்கம்:இராவண காவியம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாங்குயில் மொழியாள் மயிலியல் காம . வல்லிரும் மிருக்கையைக் கண்டால் தாங்குமோ வன்றித் தரிக்குமோ ஆவி தமிழ்மொழிச் சிறுகருங் குயிலே! 5. என்றுமே மலர்க்கண் ணிணை படச் சோனை இராவணன் கூறிய விளbசொல் சென்றினை பொருதுஞ் செவிகா முன்னம் திருநுதல், செய்யபொற் பாவை கன் றியே வெயிலி லொளிமுகங் கருத்தே கண்ணிணை வெளுத்து முத் து திர்த்தே பொன் றுவர்ச் செவ்வாய் திறந்துமுத் திலகப் புலம்பிடும் புதுமையைப் போன்றாள். அன்னமென் ன டையா ளங்ஙன மசைவற் . மழல்படு தளிரெனக் கருகிப் பன் னொடி பேச காவெழா துள்ளம் பதைபதைத் திடப்பரி வுற்றுப் பின்னொரு வாறு தேறியே மலரால் பெருகொளி முத்தினைத் துடைத்தே என்னுயிர்க் குயிரே தரிமுகங் காக்கும் இலங்கிலச் செங்கதிர் வேலோய்! 7. தாதினு மினிய தமிழ்முழு துணர்ந்த தாங்களே கழிந்ததற் கிரங்கின் பேதையென் றுலகம் பேசிடு மேழைப் 1 பெண்டிர்க ளெங்ஙனம் பொறுப்பர்! மாதவ ள தனை மறந்துமே வாழும் வகையெவை யவையெலா மாக யாதொரு குறையு மலையவட், கெங்கை யானெனு மொருமையு மற்றோம். 8. ஏ துவு மெடுத்துக் காட்டுமெவ் வளவோ இயன்றவா றெடுத்தினி துரைத்தும் கா தலங் கயிற்றா லிரண்டறப் பிணித்த கணவனோ டுயிர்விடத் துணிந்த 7. ஒருமை-'நீ, நான்' எ * னும் ஒருமைஎண், 8, ஏது காரணம், மறுமணத்தை மறுத்தனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/244&oldid=987749" இலிருந்து மீள்விக்கப்பட்டது