பக்கம்:இராவண காவியம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப் படலம் 17, வந்தனர் குறுநில மன்ன ரோர்சிலர் தந்திலன் எனதுயர் தகுதி நோக்கியே; எந்தையே! முடிவினில் எளிய அன்னரும் வந்திலர்; வீட்டினில் வைத்துக் காக்கிறேன். 18. மான் றனை யசர்கள் வரிக்கும் சூழ்ச்சியில் தோன் றிய படியொரு சொத்தை வில்லினை பன்றினன் வளைப்பவர்க் குரிய ளாமென மான்றரு தேரினர் எவரும் வந்திலர். 19. முடிவது தெரிந்திலன் முனிவ! என்குலக் கொடிபடர் கொம்பினைக் கொள்ள வல்லனோ? கடிமணப் பருவமுங் கடந்து விட்டது விடியுமோ என்குலக் கொடிக்கிம் மேதினி? 20. கெடுத்தனன் ஒருபசுங் கிளியைக் கட்டினில் அடை த்ததன் பிறப்பைவீ ணாக்கும் வீணர்போல்; செடித்தலை நாய்நரி தின்ன விட்டிடா தெடுத்துவக் கருந்துயர்ச் சிறையி விட்டனன். 21. படிப்பழி நீங்கிடும் பெரியர் பார்வையால், மிடிப்பழி நீங்கிடும் செல்வர் மேவலால், பிடிப்பழி மருங்குலென் பெண் சி னால்வருங் குடிப்பழி நீங்கிடும் காலங் கூடுங்கொல்! 22. நீலஞ்சுடுந் தீயிருள் நீக்குஞ் செங்கதிர், வலஞ்சுடும் தீமிகு மடி யு மச்சமும், நலஞ்சுடுந் நீயுள நலிவு போல்,வரு குலஞ்சுடுந் தீயெழிற் குமரி யென்பரால். 23. இன்ன ன பலசொலி யேக்கங் கொள்ளுமா மன்னவன் நிலையினைக் கண்ட மாமுனி பொன் னவீர் பொலங்கழல் பொருவில் தானே யோய்! என்னது பலாச்சுளைக் கீக்கள் பஞ்சமோ? 91, படி. - உலகம் , பிடிப்பு அழி மருங்கு ல்-இடை. 12, வலம-உடல் உளவுவி, மடி-சோம்பல். 23, பொன் அவிர் -ஒளிவிளங்கும், பொலன்-பொன். இ-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/251&oldid=987772" இலிருந்து மீள்விக்கப்பட்டது