பக்கம்:இராவண காவியம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. பெற்றவள் கண்டு மைந்த! பெருகியு கவண்டி யென்ன? சொற்றவ றாத வுந்தை சுடர்முடி புனைவார் என்ன; உற்றதை யுரைத்தான், உள்ள முடைந்தவள் ஐயா! மைந்தா! மற்றென செய்வே னென்று வயிற்றினி லடித்துக் கொண்டாள். 129, எண்ணிய வெண்ண மெல்லாம் எதிரிகட் குரிய தாச்சே அண்ணவோ! கிழவி, ஏழை, அரசனும் விரும்பான், - என்றன் கண் ணியே! யென் செய் வேன்சக் களத்திகள் இடர்செய் வாரே மண்ணிடைப் பிரிந்து வாழேன் வருகுவேன் கான மென்றாள். 124, எண்ணருந் திறலோய்! வில்லை யெடு! பிரிப் பொறுமை வேண்டாம்; பண்ணழி பாடல் போலப் பரதனுக் குரியோர் தம்மை மண்ணிடை வீழ்த்திச் செம்பொன் மணிமுடி புனைந்தே டன்ன புண்ணினை யாற்றி "காட்டைப் புகழொடு பொருந்தி யாள்வோம். 125. தீயவள் கணவன் றன்னைச் சிறையினி லிட்டோ , அன்றி வீயவே செய்தோ நாட்டை மீட்குவேன்; கொடியா "ளோடு போயொரு கொடியிற் கானம் போக்குவே அவனை யண்ணா ! 1நாயினேன் கடன் தென்ன லக்குவன் குதிப்பதி தாயும். 126. என் ன ருங் குழந்தாய்! தம்பி இயம்புதல் கேட்டி. என்ன, அன் னை யே! பரதன் நல்லவன், அவன்வரின் அயோத்தி நாட்டு மன்னவன் அவனே யென்று மக்களும் அறிவர்; பின்னர் அன்னவர் மனமும் மாறும்; அனை முத லோரு மொப்பார். 133. கண்ணியே-கண்போன் றவனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/280&oldid=987773" இலிருந்து மீள்விக்கப்பட்டது