பக்கம்:இராவண காவியம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இராவண காப்பர் 133, காரிகை யுந்த னுள்ளக் கருத்தறி யாது சொன்னேன் பூரிவெண் ணகையாய்! வாவுன் பொருளொடு கலனை யெல்லாம் ஆரியர்க் களிப்பாய்; வேலை யாளர்க்கும் அவரைக் கேட்டுத் தாருவாய் எனம கிழ்ந்து தையலவ் வாறே செய்தாள். 134. தம்பியும் வருவே னென்னத் தாயர்க்குத் துணையார் செய்வார்? அம்பனாள் நன்மை செய்யாள்; பரதனோ டரசுந் தட்டான்; நம்பிகேள் பரதன் என்றும் நமக்கஞ்சி நடப்பான் நன்றாய் இம்பரில் தார்க் கச்ச மிலையெனச் சரிவா வென்றான். 135. பொன்னணி யொடுகைத் துள்ள பொருளுடை கட்டில் மெத்தை இன்னபல் வகைய தாக இதுவரை ந/ கர்ந்து வந்த அன்னவ ருடைமை யெல்லாம் ஆரியர் தமக்குத் தந்து மின் னொடு மன் னன் றன் பால் விடைபெறப் பெயர்ந்து சென்றான். 136. மருண்/ டவ னிடத்துப் போகும் வழியினில் கண்டோர், " வெண்ணெய் திரண்டி டும் போது தாழி யுடைந்ததே; செங்கா லன்னம் இருண்ட.கா ன க த் திற் போயங் கென்செய்வாளை யோ பாவம்! புரண்டது மேல்கீ ழென்று புலம்பிடப் பேயர்ந்து ச போனான். 137. போயவன் எந்தாய்! கானம் புறப்பட. விடைதா வென்ன ஆயதோ உனைக்கான் போக்க ஐயனே என்று காண்பேன்! தீயவள் எனையே மாற்றித் தீங்குசெய் திட்டாள் மைந்தா! நீயெனை விலக்கி நாட்டை நெடிதர சாள்வா யென் றான். 135. பூரி-மிகு தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/282&oldid=987788" இலிருந்து மீள்விக்கப்பட்டது