பக்கம்:இராவண காவியம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 9. கான்புகு படலம் வேறு 1. தேரி லேறிமுன் சென் றவி ராமனும், அ ரை நீங்கி யுறவையு நீங்கிநற் ) சீரை நீங்கித் திருவொடு பன்மனை யாரை நீங்கி யடைந்தனன் காடெனா. ஈட்டு துன்பத் தினைந்தவன் கோசலை நாட்டை நீங்குவோன் நான் சர யுக்கரைக் காட்டில் வந்து களித்துமுன் போலினி வேட்டை, யாடுவ னோவென வெம்பினான். 3. என்று பின்னு மினையச் சுமந்திரன் ஓன்று தேரினை யோட்ட விரைவினில் நின்ற காவினை நீந்தி விரைந்துபோய்ச் சென்று கங்கைக் கரையினைச் சேர்ந்தனன். 4. மருங்கு நீள்கரை வைகி யிருக்கையில் சிருங்கி பேரம் எனுநகர்ச் சீர்த்தியான் சுருங்கு தீமைக் குகனெனுந் தோழனை ஒருங்கு கண்டவ னுற்ற துரைத்தனன். 5. துன்ப முற்றுத துளங்கியத் தோழனும் அன்புடன் புல வூணு மளித்திட அன்ப வின்றய லாரிடை யுண்பதில் பின்பு வந்து பெருவிருந் துண்குவேம். 6. என்று கூறி யிரும் ன லுண்டவன் மன்ற லங்குழல் மாதுட னாயிடைத் துன்று புல்லின் படுக்கையிற் றுஞ்சினான்; நின்று காத்தனன் பின்வரு நீர்மையான். 7. கால மென் னுங் கதிரவன் தொன் றலும் ஏல தாமென் றெழுந்து குகன் றனால் ஆலம் பால்கொ டணிந்து சடைமுடிக் கோலங் கொண்டு கொடிப்பட கேறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/288&oldid=987796" இலிருந்து மீள்விக்கப்பட்டது